Thursday, March 12, 2015

என்னுரை



K.பாலசந்தர்

திரையுலகின் பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர்.இயக்குநர் சிகரம் என்று போற்றப்பட்டவர்.

K.பாலச்ந்தர்

தமிழ் மேடை நாடக உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.தனது 80ஆவது வயதுகளிலும் மேடை நாடகம் எழுதி...அதன் அரங்கேற்ற நிகழ்ச்சியில்..அதன் வெற்றிக்காக மேடையில் இங்கும் அங்கும் அலைந்து நடிகர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்.

இவரது பல படங்கள் சர்ச்சைக்கு உள்ளானவை.ஆனாலும் பாராட்டப்பட்டவை.யாருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர்.ஆகவே தான் கடைசி வரை வெற்றி அன்னை அவரை விட்டு விலகவில்லை.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்.

கதாநாயகர்களையே மையமாக வைத்து, கதாநாயகிகளை ஊறுகாயைப் போல காட்டி வந்த வெள்ளித்திரையில், பெண்களை மையப்படுத்திய கைவிட்டு எண்ணக்கூடிய அளவிற்கான இயக்குநர்களில் ஒருவர்.

இவரைப் பற்றி, இவர் திரைப்படங்கள் பற்றி ஒரு டயரி குறிப்புபோல புத்தகம் வெளியிட்டால் என்ன? என்ற எண்ணத்தின் வடிகாலே இந்நூல் எனலாம்.

இவரைப் பற்றி எழுத வேண்டும் என எனக்குத் தோன்றியதற்கான மூன்று காரணங்கள்...

1) பாலசந்தரின் தீவிர ரசிகன் நான்

2) அவர் இயக்கியுள்ள அனைத்துத் தமிழ்ப்படங்களையும் பார்த்தவன் நான்

3)அவருக்கு உயிர் மூச்சாய் இருந்த நாடக மேடை எனக்கும் உயிர்.இன்றும், தமிழ் நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்து வருபவன்.என் நாடகங்கள் சிலவற்றை வந்து கேபி பார்த்து பாரட்டியுள்ளார்.

அவரைப் பற்றி இணைய வாயிலாக அறிந்தவை, ஊடகங்களில்  வந்தவை, நண்பர்களின் வாயிலாகக் கேட்டவை ஆகியவற்றைத் தொகுத்து இந்நூலை ஆக்கியுள்ளேன்.

தீவிர ரசிகனாய் இருந்தாலும் நடுநிலைமையுடன் தான் எழுதியுள்ளேன்.

இந்நூலை என் பெருமதிப்பிற்குரிய,மரியாதைக்குரிய இயக்குநர் பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்

அன்புடன்

டி.வி.ராதாகிருஷ்ணன்