Sunday, February 1, 2015

38- பொய்



பார்த்தாலே பரவசம் வந்து ஐந்தாண்டுகள் கழித்து வந்த படம் "பொய்"(2006)


காதலுக்கு முரணான ஒருவருக்கும், காதலை ஆராதிக்கும் ஒருவருக்கும் இடையே எப்படி காதல் உருவாகிறது என்பதே கதை.
..
காதல் என்பது இலட்சியங்களுக்குத் தடையானது. முன்னேற நினைக்கிற பெண்கள் காதலிலோ திருமணத்திலோ சிக்கிக் கொள்ளக்கூடாது. ஏதோ வாழ்ந்தோம் இறந்தோம் என்பது வசித்தல் தானே தவிர வாழ்க்கையல்ல. தான் வாழ்ந்ததற்கான அடையாளங்களை இந்த உலகத்துக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பவர் விமலாராமன்.

காதல் என்பது மும்மதம் தாண்டிய ஒன்று.இம்மதம்ஒருமதம் கெட்டவனையும் நல்லவனாக்கும்.என காதலுக்கு ஆதரவானவர் உதயகிரன்.

இந்த இரு துருவங்களை இணைப்பதே பொய்.....

தமிழக அரசியல்வாதி வள்ளுவனார்.உண்மையானவர்.மக்களின் பெரு மதிப்பைப் பெற்றவர்.தவறேதும் இழக்காத மகன் கம்பன் சிறையில் இருக்கிறான்.அவனை வெளிக் கொணர எம்முயற்சியும் செய்யாதவர் வள்ளுவனார்.இதை, எதிர்க்கட்சியினர் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு அவனை ஜாமீனில் எடுக்கின்றனர்.ஒருகட்ட்த்தை.அவன் நாட்டைவிட்டு ஸ்ரீலங்காவிற்குச் செல்கிறான்.அவன் வலியை அவன் தாய் வாசுகி மட்டுமே அறிவாள்.லங்கையில் ஷில்பா என்னும் கல்லூரி மாணவியின் நட்பு கிடைக்கிறது.

கம்பன், மற்றொரு கற்பனைப் பாத்திரமாக உதய்கிரண், ஷில்பாவாக விமலா ராமன்,அம்மா அனுராதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருந்தனர்.

மதியும், விதியுமாய் இயக்குநர் சிகரம் நடித்திருப்பார்.பிரகாஷ் ராஜும்  இப்படத்தில் நடித்துள்ளார்.

 இலங்கையின் அழகை அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிஜீ விஸ்வநாத். வித்யாசாகர் இசை.
.
தீமையில்லாத சொல் அதாவது பொய்க்கு வாய்மையின் தகுதி உண்டு என்பதும் "பொய்"ம்மையும் வாய்மையிடத்த அதாவது குற்றம் இல்லாத நன்மை உண்டாக்கும் நோக்கத்துடன் பொய்யைக் சொன்னாலும் அது வாய்மையோடு சேர்ந்ததே என்பதும் வள்ளுவர் வாக்கு. இப்படி "பொய்"க்குக் கூட பல முகங்கள் உண்டு. குறிப்பாக இளமையில் பொய்கள் சுவையானவை. உண்மை திறந்த புத்தகம். பொய்மை தேடலின் வாசல். தேடத்தேடத்தான் சுவைகூடும். இதைத் தான் தன் படத்தில் கூறியிருக்கிறார் இயக்குநர்.

படம், எதிர்பார்த்த அளவு ஓடவில்லையாயினும், பாலசந்தரின் ரசிகன் என்ற முறையில் எனக்குப் பிடித்த படம்.

தயாரிப்பு, பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் 

No comments:

Post a Comment