Monday, February 2, 2015

41)பாலசந்தர் கதைநாயகிகளின் பெயர்கள்



பாலசந்தர், எப்படி வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, வெள்ளித்திரைக்கு அளித்தாரோ...அதே போன்று  பாத்திரங்களின் பெயர்களையும் யோசித்தே வைத்திருப்பார் போலும்...

எவ்வளவு கதாபாத்திரங்கள்..ஒரு பாத்திரத்தின் பெயரே..அவர் படைத்த படங்களில் மற்ற பாத்திரங்களுக்குக் கூடுமானவரை வந்ததில்லை

அந்தக் காலத்தில் சிவாஜி கணேசன் படம்..எம்.ஜி.ஆர்., படம் என்றே மக்கள் படங்கள் பற்றி பேசினார்.ஆனால்.இயக்குநர் ஸ்ரீதருக்குப் பிறகு..இது இந்த இயக்குநரின் படம்...என இயக்குநர்கள் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.அது போல பாலசந்தர் படங்களுக்கு என்று ரசிகர்கள் கூட்டமே இருந்தது.அவரும் தன் ரசிகர்களை ஏமாற்றியதில்லை.

சில படங்கள் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறாவிடினும்....(அவை அந்த காலகட்டத்தைத் தாண்டி, பத்து ஆண்டுகள் கழித்து வந்திருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்)அடுத்த அடுத்த ஓட்டத்தில் பணத்தை வாரித்தந்தன வெளியிட்டாளருக்கு எனலாம்.

பாலசந்தரின் படங்களில் வந்த பாத்திரங்கள் மறக்கமுடியாதவை என்பதற்கு உதாரணம்.சாதாரணமாக நாம் ஒரு படம் குறித்து பேசுகையில்..குறிப்பிட்ட நடிகைப் பெயரைச் சொல்லி, அவர் நன்கு நடித்தார் என்போம். ஆனால் கேபியின் படங்களில், அந்தப் பாத்திரங்களின் பெயரே ஞாபகம் இருக்கிறது எனில்...அது அவர் படைத்த பாத்திரப்படைப்புப் பெற்ற பெரும் வெற்றி எனலாம்.உதாரணத்திற்கு சில...

அவள் ஒரு தொடர்கதை _ கவிதா
அரங்கேற்றம் - லலிதா
தாமரை நெஞ்சம் -கமலா
மனதில் உறுதி வேண்டும்- நந்தினி
அபூர்வ ராகங்கள்- பைரவி
சிந்து பைரவி- சிந்து
அச்சமில்லை அச்சமில்லை- தென்மொழி
வறுமையின் நிறம் சிவப்பு- தேவி
புன்னகை மன்னன் - மாலினி, ரஞ்சனி

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் (பைரவி என்ற பெயர் இருபடங்களில் உபயோகித்திருப்பார், ரஞ்சனி என்ற பெயர் மூன்று படங்களில் உபயோகித்திருப்பார்.மற்றபடி பெயர்கள் மீண்டும் வந்ததே இல்லை என்பது பாராட்டுக்குரியது)
 இப்படி அவரால் எப்படி இவ்வளவு பெயர்களைப் பிடிக்க முடிந்தது.அவர் அறியாமலேயே வைத்தரா? இதுஒரு புரியாத புதிர் தான்.

(இதே போன்று ஆண் பாத்திரங்களில், எதிர் நீச்சல் மாது., நவக்கிரகம் சேது., மன்மத லீலை பிரசன்னா., உன்னால் முடியும் தம்பி , உதயமூர்த்தி ஆகியவற்றை மறக்கமுடியாதவை எனச் சொல்லலாம்)

No comments:

Post a Comment