திரையுலகில் பாலசந்தர், ஒரு அசைக்க முடியா இடத்தைப் பிடித்திருந்தாலும், தொலைக் காட்சியிலும் கவனம் செலுத்தியது பாராட்டுக்குரியது.
அதற்கான காரணமாக கேபி சொன்னது" அனைத்து மக்கள் வரவேற்பறைக்கும். எனது தொடர்கள் சென்று அடைவதால்..என் படைப்புகள் அதிக மக்களிடையே சென்றடைகிறது என்பதாகும்.
இவரது தொடர்கள் பொதிகை,சன், ராஜ், ஜெயா, விஜய் என அனைத்து சேனல்களிலும் வந்துள்ளன.
அவரது "ரயில் சிநேகம்:" கையளவு மனசு, ரமணி vs ரமணி, ஒரு கூடை பாசம், காதல் பகடை, பிரேமி, ஜன்னல், அண்ணி என அனைத்துத் தொடரும் வெற்றி பெற்றன.திரையைப் பொலவே இதிலும் பெண்ணீயம் பேசப்பட்டது
பிரேமி என்னும் தொடரில் முக்கியப் பாத்திரம் ஏற்று கேபி நடித்தார்.
சஹானா என்ற தொடரில் சிந்து பைரவியின் இரண்டாம் பாகம் பேசப்பட்டது..
அதுமட்டுமின்றி, இதிலும் பல நடிகர்களுக்கு, பல புது இயாக்குநர்களுக்கு வாய்ப்பளித்தார் கேபி.இன்றளவும் அவரது நிறுவனமான கவிதாலயம் சார்பில் தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அவரது மகன் கைலாசம். மின்பிம்பங்கள் என்ற நிறுவனம் மூலம் தொடர்களைத் தயாரித்தார்.
இன்று புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்.
கேபியின் இளைய மகன் பிரசன்னா ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்.ஒரு பெரிய வங்கியில் நிர்வாக அதிகாரியாய் உள்ளார்.
No comments:
Post a Comment