Tuesday, February 3, 2015

42- கவிதாலயாவில் பிற இயக்குநர்கள்



கலாகேந்திரா என்ற நிறுவனத்தின் சார்பில் திரு துரைசாமி, திரு கோவிந்தராஜன் ஆகியோருக்கும், ஸ்ரீ ஆண்டாள் ஃபிலிம்ஸ் சார்பில் திரு இராம,அரங்கண்ணல் அவர்களுக்கும், பிரேமாலயா சார்பில் திரு வெங்கட்ராமன் அவர்களுக்கும் கேபி அதிகப் படங்களை எழுதி, இயக்கியுள்ளார்.

1981 ஆம் ஆண்டு, கே,பாலசந்தர், புஷ்பா கந்தசாமி மற்றும் ராஜம் பாலச்ந்தர் ஆகிறோர் சார்பில் "கவிதாலயா" என்ற பெயரில் படத்தயாரிப்பு, பட வெளியீடு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

கவிதாலயா மூலமாக கேபியின் பல படங்கள் வந்தன.

தவிர்த்து, திரு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினி காந்த நடிக்க நெற்றிக்கண்,புதுக்கவிதை,நான் மகான் அல்ல,ராகவேந்திரர் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களும், கமல் நடித்த "எனக்குள் ஒருவன்" படமும் இந்நிறுவனம் சார்பில் வெளிவந்தன.

மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் முத்து ஆகிய படங்கள் வந்தன.சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அண்ணாமலை வந்தது

தவிர்த்து,பிற இயக்குநர்களுக்கும் கேபி இந்நிறுவனம் சார்பில் படம் இயக்க சந்தர்ப்பம் அளித்தார்.அந்த இயக்குநர்கள் பெயரும், அவர்கள் எடுத்த படங்களும் ...


விசு - மணல் கயிறு,அவள் சுமங்கலிதான், திருமதி ஒரு வெகுமதி,வரவு நல்ல உறவு
அமீர்ஜான்- பூ விலங்கு,சிவா, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
வசந்தபாலன் - ஆல்பம்
மௌலி- அண்ணே அண்ணே
அனந்து -சிகரம்
வசந்த் - நீ பாதி நான் பாதி, அப்பு
அகத்தியன்-விடுகதை
சரண்- இதயத் திருடன்
பாலசேகரன்- துள்ளித் திரிந்த காலம்
ஹரி- அய்யா, சாமி
செல்வா- பூ வேலி,ரோஜாவனம்
ராம நாராயணன்- ராஜகாளியம்மன், ஸ்ரீ ராஜ ராஜெஸ்வரி
ரமணா- திருமலை
பேரரசு- திருவண்ணாமலை   

No comments:

Post a Comment