Sunday, February 1, 2015

37-பாலசந்தரின் 100 ஆவது படம்



2001 ஆம் ஆண்டு பாலசந்தரின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வந்த பார்த்தாலே பரவசம் அவரது 100ஆவது படமாக அமைந்தது.

மாதவன் ஒரு மருத்துவன்,அவன் முன்னதாக ஒரு சினிமாவில் வேறு நடித்திருந்ததால் ஏகப்பட்ட பெண் ரசிகர்கள். அவனைப் பார்க்க, பேச என வரிசையில் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் அவன் சிமியை மணமுடிக்கிறான்.ஒருநாள் ராதிகாசௌத்ரி ஒரு குழந்தையுடன் வந்து அது மாதவனுக்கு பிறந்தது என்று சொல்ல, அவனும் அதை ஒப்புக் கொள்கிறான்.இச்சம்பவத்தால், சிமியும், மாதவனும் விவாகரத்துப் பெறுகின்றனர்.ஆனாலும் , ஒருவருக்கொருவர் நண்பர்களாய் இருப்போம் என தீர்மானிக்கிறார்கள்.தவிர்த்து..மாதவன், சிமிக்கு மற்றொரு திருமணம் செய்து வைக்கப் மணமகனைத் தேடுகிறான்.

செல்லா என்ற பெண் மாதவனின் மருத்துவ மனையில் நர்ஸாக பணி புரிகிறாள்.அவள் மாதவனை விரும்புவதை அடுத்து, சிமி மாதவனுக்கு செல்லாவைப் பார்க்கிறாள்.

அழகு ஒரு நாட்டியக்காரன்.அவன் நாட்டியத்தை சிமி விரும்புகிறாள்.அதனால்  அழகிற்கு சிமியை மணமுடிக்க மாதவன் நினைக்கிறான்.

ஆனால்..அழகின் பெற்றோர் பணத்துக்காக அவனை அவர்கள் உறவுக்கார பெண் ஒருத்திக்கு மணமுடிக்கின்றனர்.

செல்லாவின் பெற்றோரோ, மாதவனின் முன்னாள் நடத்தை அறிந்து பெண் கொடுக்க மறுக்கின்றனர்.அதனால் அவர்களுக்குள் நடந்த திருமணம் நின்றுவிடுகிறது.

ஒருகட்டத்தில் மாதவன் மீண்டும் சிமியை மணக்கிறான்.செல்லா மருத்துவமனையில் பணி புரியும் விவேக்கை மணக்கிறாள்.

மாதவனாக  மாதவனும், சிமியாக சிம்ரனும், அழகாக லாரென்ஸும்,செல்லாவாக ஸ்டெல்லாவும் நடித்தனர்.

பாடலாசிரியர் வாலியும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.கமல் சிறப்புத் தோற்றம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நீதானே என் தேசிய கீதம்,(சித்ரா,பல்ராம்)அழகே சுகமா (ஸ்ரீனிவாஸ், சாதனா சர்கம், மன்மத தேசம்,(சங்கர் மஹாதேவன், நித்யஸ்ரீ மகாதேவன்) ஆகிய பாடல்கள் இனிமை.

ஒளிப்பதிவு ஏ.வெங்கடேஷ்

படம் எதிர்ப்பார்த்த அளவு ஓடவில்லை.புதுமுகங்களைக் கொண்டு இப்படத்தை எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என எண்ணுவதாக கேபி பின்னர் ஒரு பேட்டியில் கூறினார் 

No comments:

Post a Comment