Sunday, February 15, 2015

46)பாலசந்தரும்..அறிஞர் அண்ணாவும்



பாலசந்தருக்கு அறிஞர் அண்ணாமீது ஒரு தனி அன்பு உண்டு.

இருகோடுகள் படத்தில் கலெக்டர் ஜானகி முதல்வரை சந்திப்பதைப் போன்ற காட்சி ஒன்று வரும்.அண்ணா அப்போது உயிருடன் இல்லை ஆனால்..கேபி அண்ணாவின் மூக்குக் கண்ணாடியைக் காட்டி, சிவகங்கை சேதுராஜன் என்பவரை அண்ணா போல பேச வைத்திருந்தார்.,

 கேபியும், அண்ணாவும் பற்றி கலைஞர் கூறியது-

1941 - 42 ஆம் ஆண்டுகளில் அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ வார இதழில் `நன்னிலம் நண்பர்’ என்ற தலைப்பில் வாரம் தோறும் ஒரு கட்டுரை வெளிவரும். அந்த நன்னிலம் நண்பர் யாரென்றால், நமது தஞ்சை மாவட்டத்தில் உள்ள நன்னிலம் என்ற ஊரில் பள்ளி மாணவராய் இருந்து படித்து பகுத்தறிவு இயக்கத்தின் கொள்கைகளில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் விளக்கமாக புரிந்து கொள்வதற்காக, அண்ணா, `திராவிட நாடு’ இதழில் எழுதிய கட்டுரைகள் குறித்து கேள்விக்கணைகள் தொடுத்தவர். கே.பாலச்ந்தர்
!
அவர் தன்னுடைய பகுத்தறிவு இயக்கம் பற்றிய சந்தேகங்களையும், திராவிட இயக்கம் பற்றிய கருத்துக்களையும் விரிவாக தெரிந்து கொள்வதற்காக அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் அளித்து அண்ணா அவர்கள் வெளியிட்ட அந்தக் கருத்துக்கள் வாரந்தோறும் வெளிவந்தது. அதன் மூலம் நான் பாலசந்தரை தெரிந்து கொண்டு, அந்த 41-42 ஆண்டுகளிலேயே எனக்கும் அவருக்கும் நட்பும் நல்ல பழக்கமும் ஏற்பட்டது. அந்த சம்பவங்களை அவரும் நானும் அண்மைக் காலத்திலே கூட மறவாமல் ஒவ்வொரு உரையாடலிலும் பதியவைத்திருக்கிறோம் என்று கலைஞர் கருணாநிதி,தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment