Friday, January 9, 2015

10-சொல்லத்தான் நினைக்கிறேன்



1973 ஆம் ஆண்டு வந்த மற்றொரு படம் "சொல்லத்தான் நினைக்கிறேன்".

ஆனந்த விகடனில் மணியன் எழுதியத் தொடர் "சொல்லத்தான் நினைக்கிறேன்'.இக்கதையை மணியனே..வித்வான் வே.லட்சுமணனுடன் சேர்ந்து திரைப்படமாக எடுக்கத் தீர்மானித்தார்,.இக்கதைக்கு..பாலசந்தரே சரியான இயக்குநராய் இருப்பார் என்று எண்ணிய மணியன் அப்பொறுப்பை கேபியிடம் ஒப்படைத்தார்.

திரைக்கதை,வசனம், இயக்கம் பொறுப்பை ஏற்ற பாலசந்தர்,இப்படத்தில் நடிக்க சிவகுமார்,ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா, சுபா ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார்.

மூன்று சகோதரிகள்..அவர்களது வீட்டில் தங்கியுள்ள சிவகுமாரை விரும்புகின்றனர்.ஆனால். அவர்களில் சிவகுமாரோ, ஜெயசித்ராவை விரும்புகிறார்.ஆனால் ஜெயசித்ராவோ, தன் சகோதரி ஜெயசுதாவை, play boy ஆக இப்படத்தில் நடித்த கமல்ஹாசனிடமிருந்து காப்பாற்ற தன் காதலைத் தியாகம் செய்கிறார்.

பாலசந்தர் படங்களுக்கே ஆன பல முக்கியத் திருப்பங்களுடன் படம் அருமையாய் வந்தது.

காதலன்..தான் விரும்பிய காதலியையே மணக்க வேண்டும் என்ற சினிமா உலகின் விதியை மாற்றி புதுக்கருத்தொன்றை அமைத்தார் பாலசந்தர் இப்படம் மூலம்.

கமல்ஹாசனின் play boy நடிப்பில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது சிறப்பு.

1 comment:

  1. The Serial written by Maniyan in Ananda Vikatan was titled "Ilavu Kaatha Kiliyo". This info is in the film titles itself

    ReplyDelete