Saturday, January 10, 2015

12- நான் அவனில்லை



இந்த ஆண்டு வந்த மற்றொரு படம் "நான் அவனில்லை"

ஆஸ்தான கதாநாயகனாய் இருந்த ஜெமினி கணேசன் சொந்தப் படம் இது.ஸ்ரீ நாராயணி ஃபிலிம்ஸ் சார்பில் எடுக்கப்பட்டது.

இப்படத்தில் ஜெமினி, லட்சுமி, கமல்ஹாசன், ஜெயபாரதி, ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், S.P. பாலசுப்ரமணியம் பாடிய "ராதா காதல் வராதா" என்றபாடலும், "மந்தார மலரே" என ஜெயசந்திரனும், பி.சுசீலாவும் பாடிய பாடல்கள் ஹிட் ஆகின.

ஜெமினி கணேசன்..ஒரு பெண்பித்தன்.பல ஊர்களில் பெண்களை ஏமாற்றி மணந்தவர்.ஆனால் நீதிமன்றத்தில் "நான் அவனில்லை" என வாதாடுகிறார்.இப்படத்தில் கமல்ஹாசன் ஜெயசுதாவை மணக்கும் வாலிபனாய் வருவார்.

மற்றபடி..இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

பாலசந்தர் இயக்கத்தில் இந்த ஆண்டு வந்த மற்றொரு படம், "ஜீவித ரங்கம்" ஆகும்.இது அரங்கேற்றத்தின் தெலுங்கு படைப்பு.சாவித்ரி இதில் நடித்திருந்தார்.

2 comments:

  1. ராதா காதல்  வராதா பாடலை  சிறிநிவாஸ் பாடவில்லை, எஸ்,பி . பி யே பாடியிருந்தார் ..

    ReplyDelete
  2. தவறைத் திருத்தி விட்டேன்.நன்றி.

    ReplyDelete