Friday, January 2, 2015

2-இயக்குநர் ஆனார்



ஆண்டு 1965

சாதாரணமாக ஒரு கலைஞனுக்கு, சிறந்த ஒரு படைப்பைப் பார்த்தால், அது போன்ற ஒன்றை தன்னால் படைக்க முடியவில்லையே என்ற எண்ணமும், அதே போல ஒன்றை தன்னாலும் படைக்கமுடியும் என்று நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும்.

இது போட்டி, பொறாமையால் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது.கலைத்தாகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பாலசந்தரும் ஒரு கலைஞன் தானே..அவரும் பாராட்டும் மற்றவர் படிப்பும் உண்டல்லவா?

ஸ்ரீதரின், "நெஞ்சில் ஒரு ஆலயம்' மருத்துவமனை ஒன்றிலேயே நடைபெறுவது போல எடுக்கப்பட்ட ஒரு குறுகிய காலத் தயாரிப்பு.அந்த வெற்றிப் படத்தை அன்று ரசித்த மக்கள் ஏராளம். பாலசந்தரும் ஒருவராய் இருந்திருப்பார்.தானும் அப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என விரும்பியிருப்பார் போலும்.


அவரது "நீர்க்குமிழி" நாடகம் அப்படித்தான் இருந்தது.ஒரு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.

இந்நாடகம் திரைப்படமாய் எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.பாலசந்தர் முதன் முதல் இதன் மூலம் இயக்குநராக அறிமிகப்படுத்தப்பட்டார்.அதற்கு பின் அவரது திரையுலக கிராஃப் மேல் நோக்கிச் செல்லத் தொடங்கியது.

நீர்க்குமிழியில் அவர் இயக்குநர் என்றதுமே முக்தா ஸ்ரீனிவாசனை சந்தித்தார்.அவர் தைரியமளித்தார்.

இந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாய் அமைந்தது போல, நாகேஷூம் குணசித்திர வேடங்களில் பட்டையைக் கிளப்ப முடியும் என்று நிரூபித்தப் படம்.இப்படத்தில் அவரைத்தவிர, சுந்தரராஜன்,சௌகார் ஜானகி, வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.

இப்படத்தில் உவமைக் கவிஞர் சுரதா எழுதி, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய..

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா" என்ற பாடல் படமாக்கப் பட்ட விதம், நாகேஷின் நடிப்பு ஆகியவை அற்புதமாய் அமைந்தன.

முதல் படத் தலைப்பே "நீர்க்குமிழி" என உள்ளதே..என சில நண்பர்கள் கூறியும்..அதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கையில்லை.

இதே ஆண்டு அவரது "நாணல்" என்ற நாடகமும் இவரது இயக்கத்திலேயே பட ஆனது.இந்த படமும் பெரும்பான்மைக் காட்சிகள் ஒரே வீட்டிற்குள் அமைந்தது போல கதை அமைப்பு.

ஆக, 1964ல் தெய்வத்தாய், சர்வர் சுந்தரம் மூலம் திரைக்கு வந்த பாலசந்தர் அடுத்த ஆண்டே "ஊஞ்சே லாக் (ஹிந்தி) பூஜைக்கு வந்த மலர்,நீலவானம் ஆகிய படங்களுக்கு வசனமும், நீர்க்குமிழி,நாணல் என இரு படங்களுக்கு திரைக்கதை, வசனம்.இயக்கமும்..ஆக ஐந்து படங்களில் இவர் பங்கேற்றார்.

1 comment:

  1. The drama and subsequent film Naanal was based on the original 1955 film "Desperate Hours" starring Mickey Rourke, Anthony Hopkins, Mimi Rogers, Kelly Lynch, Lindsay Crouse, Elias Koteas and David Morse.directed by Michael Cimino, The film was based on a novel with the same title written by Joseph Hayes.

    ReplyDelete