Sunday, January 18, 2015

20- வறுமையின் நிறம் சிவப்பு

                             

பாலசந்தருக்கு சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்டும், சிறந்த இயக்குநராக தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதையும் வாங்கிக் கொடுத்த ஆண்டு 1980.

படம்- வறுமையின் நிறம் சிவப்பு.பிரேமாலயா வெங்கட்ராமனுக்காக பலசந்தரின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வந்தப் படம்.

கமல்ஹாசன், ஸ்ரீதேவி,எஸ்.வி.சேகர், திலீப்..பூர்ணம் விஸ்வநாதன்,பிரதாப் போதன்,தேங்காய் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மூன்று படித்த வேலையில்லா இளைஞர்கள் பற்றிய படம்.

ரங்கனும் அவனது நண்பனும் தில்லியில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்.அவர்களுடன் தம்பு என்னும் நண்பனும் சேர்கிறான்.ரங்கன் நேர்மையானவன்.மனதில் சரி என நினைப்பதை "பட்"டென சொல்லிவிடுபவன்.மூன்று நண்பர்களுக்கும் வேலையில்லை.பலநாட்கள் உண்ண உணவும் இருப்பதில்லை.ஒருநாள் ரங்கனிடம் பொய் சொல்லி ,அவனிடம் இருக்கும் பணத்தைப் பிடுங்கிச் செல்பரை துரத்துகிறான் ரங்கன்.அவர் தேவியின் வீட்டினுள் நுழைகிறார்.தேவியின் தந்தை அவர்.குதிரைப் பந்தயத்தில் கலந்துக் கொள்ள பணத்திற்காக எந்த பொய்யையும் சொல்லக்கூடியவர்,தன் பெண் இறந்துவிட்டதாகக் கூறி ரங்கனிடம் பணத்தை வாங்கியுள்ளார்.அதை அறிந்த தேவி, ரங்கனுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கிறார்.இதன் மூலம் ரங்கனும், தேவியும் நண்பர்கள் ஆகின்றனர்.தேவி ஒரு நாடக நடிகை.அவள் ரங்கனின் மீது இரக்கப்பட்டு, நாடக இயக்குநரை ரங்கனுக்கு அறிமுகப் படுத்துகிறாள்.ஆனால்...அந்த இயக்குநரின் திறமை ரங்கனைக் கவரவில்லை.இதனிடையே நாடக இயக்குநர் தேவியை விரும்ப, தேவை ரங்கனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தால் அவனை மணப்பதாகக் கூற, ரங்கன் இதை அறிந்து கோபப்பட, தேவி, " தான்..ரங்கனையே விரும்புவதாகக் கூறுகிறாள்" இதனிடையே, பரணி என்னும் வாய்பேசமுடியா ஒரு பாத்திரம் இவர்களுக்கு உதவுகிறது.ரங்கனின் தந்தை மகனைத் தேடி தில்லி வர..மகன் ஒரு முடிதிருத்தும் கடையில் வேலை செய்வதைப் பார்க்கிறார்."இந்த வேலையில் தான் திருப்தியாக இருப்பதாய்" ரங்கன் கூறுகிறான்.ரங்கனின் தந்தை இதற்கும், ரங்கன் தேவியை மணப்பதற்கும் சம்மதிக்கிறார்.

ரங்கனின் நண்பன், ஒரு பணக்கார விதவையை மணக்கிறான்.தம்பு  பைத்தியக் காரனாக அலைகிறான்.

இப்படி பல சம்பவங்கள்,,பல முடிச்சுகள் கொண்ட கதையே வறுமையின் நிறம் சிவப்பு.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கீழ்கண்ட அனைத்து பாடலும் ஹிட்.

"சிப்பி இருக்குது" (எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி)
"தீர்த்தகரையினிலே" ( எஸ்.பி.பாலசுப்ரமனியம்)
"நல்லதோர் வீணை" (எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
"பாட்டு ஒன்னு பாடு" (எஸ்.பி.பாலசுப்ரமணியம்)

இந்த படம் 1981ல் கமல், ஸ்ரீதேவி நடிக்க "akali rajyam' என்ற பெயரில் தெலுங்கிலும், 1983ல் "Zara si zindaki' என்ற பெயரில் கமல், அனிதாராய் நடிக்க ஹிந்தியிலும் பாலசந்தர் இயக்கத்தில் வெளியானது.

No comments:

Post a Comment