Thursday, January 29, 2015

32- அழகனும்...ஒரு வீடு இரு வாசலும்

       


1990 ஆம் ஆண்டு வந்த படம்.

ஒரு வீடு, இரு வாசல்..

படத்தின் பெயரே சொல்லிவிடுமே...ஒரே திரைப்படத்தில்..இரு வேறு, வேறு கதைகள்.

கணேஷ், குமரேஷ் இரு வயலின் வித்வான்களும் நடித்தனர்.யாமினி என்ற நடிகையும் நடித்தார்.அனுராதா ரமணனின் கதையைத் தழுவியது இது.திரைக்கதை, இயக்கம் பாலசந்தர்.

அடுத்தது துணை நடிகர்கள் பற்றியது.ஆணாதிக்க சமுதாயத்தின் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் சொல்லப்பட்டது.இசை வி.எஸ்.நரசிம்மன்

அடுத்து வந்த படம் அழகன்

அழகப்பன் ஒரு உணவு விடுதி நடத்தி வருபவன்.நடுத்தர வயது.அவனுக்கு நான்குக் குழந்தைகள்.கல்லூரி மாணவியான ஸ்வப்னா அழகப்பனிடம் காதல் கொள்கிறாள்.ஆனால், இருவருக்குமிடையே உள்ள வயது வித்தியாசத்தைச் சொல்லி அழகப்பன் அவளுக்கு அறிவுரைச் சொல்கிறான்.படிக்காத அழகப்பன் ஒரு டுடோரியல் காலேஜில் படிக்கிறான்.அங்கு ஆசிரியை கண்மணி.அவனை விரும்புகிறாள்.அவளையும் மறுக்கிறான் அவன்.பிரியா ரஞ்சன் என்னும் பரதநாட்டியப் பெண், அழகப்பனை விரும்புகிறாள்.அழகப்பனும் அவளை விரும்பினாலும், அவர்களுக்குள் இருக்கும் ஈகோ தடுக்கிறது.

இதனிடையே அழகப்பனின் கார் ஓட்டுநர் மூலம் குழந்தைகள் அவனுடையவை அல்ல, அவனது வளர்ப்புக் குழந்தைகள் எனத் தெரிய வருகிறது.அழகப்பனின் தந்தைப் பாசம் அறிந்து கொண்ட ஸ்வப்னா தானும் அழகப்பனை அப்பா என அழைப்பதுடன்..மற்ற நான்கு குழந்தைகளுடன் சேர்ந்து அழகப்பனையும், பிரியா ரஞ்சனையும் தொலைபேசியில் பேச வைக்கிறாள்.

இருவரும் ஒன்று சேர்கின்றனர்.

அழகப்பனாக மம்மூட்டி,பிரியா ரஞ்சனாக பானுப்பிரியா,ஸ்வப்னாவாக மதுபாலா, கண்மணியாக கீதா மற்றும் ஓட்டுநராக பப்லு பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

கேசி ஃபிலிம்ஸ் கோவை செழியன் தயாரிப்பு.

மரகதமணி இசையில்

சங்கீத ஸ்வரங்கள் (எஸ்,பி.பி., சந்தியா),சாதி மல்லிப் பூச்சரமே (எஸ்.பி.பி) மழையும் நீயே (எஸ்.பி .பி),துடிக்குதடி நெஞ்சம் தெம்மாங்கு பாட(எஸ்.பி.பி, சித்ரா),தாதிதோம் (சித்ரா) ஆகிய பாடல்கள் ஹிட்.

இப்படத்தில் ஒரு பாடல் காட்சி இரவு முழுதும் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment