Thursday, January 8, 2015

8-வெள்ளிவிழாவும் கண்ணாநலமாவும்



ஒரு கதாநாயகன்..இரு கதாநாயகிகள்

பாலசந்தரின் ஆரம்பகாலப் படங்களில் ஒரு கதாநாயகன், இரு கதா நாயகியர் இருப்பர்.பெரும்பாலான அவர் படங்கள் இப்படி அமைந்தது..எதேச்சையாக, கதையமைப்புக்கு ஏற்ப இருந்த்து எனலாம்.

1972 ஆம் ஆண்டும் இதற்கு விதி,விலக்கல்ல

இவ்வாண்டு வந்த படங்கள் இரண்டு தமிழ்ப்படங்கள், ஒரு ஹிந்தி, ஒரு மலையாளப்படம்.

ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ ஆகியோர் நடித்து 'வெள்ளிவிழா" என்ற படம் இவ்வாண்டு வந்தது."காதோடுதான் நான் பாடுவேன்" என ரகசியக்குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ..வி.குமார் இசையில் வந்த இப்பாடல் அருமையாய் இருந்தது.

அடுத்து வந்த படம் "கண்ணா நலமா?" ஜெமினி, ஜெயந்தி நடித்தது.

மற்றபடி வழக்கமான பாலசந்தரின் ஃபார்முலா படங்களாகவே இவை அமைந்தன எனலாம்.

"haar jeet"  என்ற ஹிந்திப்படத்தின்  கதை இவருடையது ரெஹ்னா சுல்தான், அனில்தவான் நடித்திருந்தனர்.

அடுத்து பாலசந்தரின் கதையில் வந்த மற்றொரு படம்.மலையாளப் படமாகும்.பிரேம் நசீர்,மது, ஷீலா நடித்திருந்தனர்.  படம் Aaradimanninte Janmi(நீர்க்குமிழி)

ஆரம்பகாலங்களில் கேபியின் அதிகப் படங்களில், ஜெமினி கணேசன்,நாகேஷ்,சுந்தரராஜன், ஜெயந்தி,சௌகார் ஜானகி ஆகியோரே பெரும் பங்கு பெற்றிருந்தனர் எனலாம்.

No comments:

Post a Comment