Sunday, January 25, 2015

28-புன்னகை மன்னன்



1986 ஆம் ஆண்டு வந்த மற்றொரு வெற்றி படம் "புன்னகை மன்னன்".பாலசந்தர் கதை, இயக்கம்.இப்படம் பின் "டேன்ஸ் மாஸ்டர்" என தெலுங்கிலும், "சாச்சா சேப்ளின்" என்ற பெயரில் ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

சேதுவும், நந்தினியும் காதலர்கள்.சேது ஏழை என்பதால் ரஞ்சினியின் பெற்றோர் இவர்கள் காதலை எதிர்க்கின்றனர்.ஆகவே அவர்கள் இருவரும் மலையுச்சிக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர்.ஆனால் உச்சியில் இருந்து விழும் போது, சேது, ஒரு மரக்கிளையில் மாட்டிக் கொண்டு உயிர் பிழைக்கிறான்.ஆனால் ரஞ்சினி உயிர் இழக்கிறாள்.தற்கொலை செய்து கொள்ள முயன்றக்  குற்றத்திற்காக சேதுவிற்கு ஓராண்டு தண்டனைக் கிடைக்கிரது.

சிறையிலிருந்து வெளியே வந்த சேது, முதிர்கன்னியான பத்மினி நடத்தும் நடனப்பள்ளியில் டேன்ஸ் மாஸ்டராக சேர்கிறான்.ஒருநாள் ரஞ்சினி இறந்த இடத்திற்கு அவன் செல்லும் போது அங்கு மாலினி என்ற இலங்கைப் பெண் , பரீட்சையில் தோற்றதற்காக தற்கொலை செய்து கொள்ள வர..அவளைக் காப்பாற்றுவதுடன் அறிவுரையும் சொல்கிறான் சேது.

பின், அவர்கள் சந்திப்பு அடிக்கடி நடக்கிறது.ஆனால் சேது அவளை விட்டு விலகியேச் செல்கிறான்.அப்படி ஒருநாள் மாலினி சேதுவின் சித்தப்பா  சாப்ளின் செல்லப்பாவைப் பார்க்கிறாள்.காதல் தோல்வியால் அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.ஆனாலும், அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவராய் இருந்ததால் மாலினி அவரை அடிக்கடி சந்திக்கிறாள்.இதனால் சேதுவிற்கும் அவள் மீது கோபம் உண்டாகிறது.

பின்,சாப்ளின் காதல் தோல்வி பற்றி அறிந்த சேது..பத்மினியை, சாப்ளினுக்கு மணமுடிக்கிறான்.சேது,மாலினி காதலை அறிந்த சேப்ளின் அவர்களுக்கு மணமுடிக்கத் தீர்மானிக்கிறார்.மாலினியின் பெற்றோர் முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக் கொள்கின்றனர்.சேது-மாலினி நிச்சயதார்த்தம் அன்று சேதுவை பழிவாங்க ரஞ்சினியின் தந்தை ஒரு கூடை ஆப்பிளை பரிசாக அளிக்கிறார்.அந்தக் கூடையை சேதுவின் தந்தை சாப்ளின் காரில் வைக்க, சேதுவும், மாலினியும் அக்காரில் மலையுச்சிக்குச் செல்கின்றனர்.ஆனால், ஆப்பிள் கூடையில், ரஞ்சினியின் தந்தை "பாம்" வைத்துள்ளதை அறிந்த சாப்ளின் அவர்களை துரத்த...அதற்குள் பாம் வெடித்து சேதுவும், மாலினியும் உயிர் இழக்கின்றனர்.

இளையராஜா இசைக்கு, பாடல்களை வைரமுத்து எழுதினார்.கீழ்கண்ட பாடல்கள் சூபர்ஹிட்

என்ன சத்தம் இந்த நேரம் - எஸ்,பி.பி.
காலகாலமாய் வாழும் - எஸ்.பி.பி., சித்ரா
சிங்களத்து சின்னக் குயிலே - எஸ்.பி.பி., சித்ரா
மாமாவுக்கு குடுமா குடுமா _ மலேசியா வாசுதேவன்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்- சித்ரா
வான் மேகம் பூப் பூவாய்- சித்ரா



சேதுவாகவும், சேப்ளின் செல்லப்பாவாகவும் கமல் ஹாசன், ரஞ்சினியாக ரேகா, மாலினி யாக ரேவதி, பத்மினியாக ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தனர். பட வெள்ளிவிழா கொண்டாடியது.

இதே ஆண்டு,மணியனின் கதையில் பாலசந்தர் இயக்கிய சொல்லத்தான் நினைக்கிறேன்  "sundara swapnagalu" என்ற பெயரில் ரமெஷ் அரவிந்த் நடிக்க கன்னடத்தில் வெளியானது.

No comments:

Post a Comment