Monday, January 19, 2015

21-தில்லுமுல்லு படமும் ரஜினியும்



ஹிந்தியில் 1979ஆம் ஆண்டு அமல்பாலேகர் நடிக்க ரிஷிகேஷ்முகர்ஜி இயக்கத்தில் வந்த "கோல்மால்" என்ற படத்தின் கதையே 1981ல் விசு வசனம் எழுத பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா தயாரிப்பில் வந்த  "தில்லுமுல்லு" ஆகும்

சந்திரன், அவரது குடும்ப நண்பர் சொல்ல...ஸ்ரீராமசந்திரமூர்த்தி நடத்தும் அலுவலகத்தில் வேலைக்குச் செல்கிறார்.அவரிடம் நற்பண்புடையவராகவும்,ஆன்மீகவாதியாகவும் நடித்து நல்ல பெயர் எடுக்கிறார்.ஒருநாள் ராமசந்திர மூர்த்தி, சந்திரனை ஒரு ஃபுட்பால் மேட்சில் பார்க்கிறார்.சந்திரன் அவரிடம் அவர் பார்த்தது தன் தம்பி இந்திரனை என பொய் சொல்கிறார்.மேலும், தாங்கள் இரட்டையர்கள் என்றும் தன் சகோதரனுக்கு மீசை கிடையாது என்றும் கூறுகிறார்.

இதைக்கேட்ட ராமசந்திரமூர்த்தி, சந்திரன் மீது தான் பட்ட சந்தேகத்திற்கு வருத்தப்பட்டு, தன் சகோதரன் என சந்திரன் கூறிய இந்திரனை தன் மகள் சரோஜினிக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டுகிறார்.சந்திரனும் ஒப்புக் கொள்கிறான்.  நாளடைவில் சரோஜினி அவனிடம் காதல் கொள்கிறாள்.இது விஷயமாக, மேலும் என்ன செய்வது என அறியாமல் சந்திரன் தன் நண்பரை (நாகேஷ்) ஆலோசனைக் கேட்கிறார்.

நல்ல நகைச்சுவைக் காட்சிகள்...இந்திரன் ,சந்திரன் என மாறி மாறி வருகையில் உருவாகி..நகைச்சுவை நடிப்பிலும் தான் சூப்பர் என ரஜினி நிரூபித்துள்ளார்.மாதவி சரோஜினியாக நடிக்கிறார். தேங்காய் ஸ்ரீனிவாசன் ராமசந்திரமூர்த்தியாக வந்து நகைக்கவைக்கிறார் தன் அனுபவமிக்க நடிப்பால்.

பாலசந்தர், ரஜினிக்கு கரடுமுரடான பாத்திரங்களிலேயே நடிக்க வைத்திருப்பதால்...உன்னாலும் நகைச்சுவைப் பாத்திரத்தில் பிரகாசிக்கமுடியும் எனச் சொல்லி ரஜினியை நடிக்கவைத்துள்ளார்.

கமல்ஹாசன் போலி வக்கீலாக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

படம் வெற்றி பெற்றது.

சமிபத்தில் இப்படம் சிவா , கோவை சரளா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் மீண்டும் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. 

No comments:

Post a Comment