Thursday, January 8, 2015

9-புதுமை இயக்குநர்



1973 பாலசந்தருக்கு மிகப்பெரிய திருப்பத்தைத் தந்த ஆண்டு எனலாம்.

இதுவரை அவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த வழக்கமான நடிகர்களிடமிருந்து விலகி, சிவகுமா, பிரமிளா,எம்.என்.ராஜம், ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகியோர் நடிக்க "அரங்கேற்றம்" என்ற படம் வெளியானது.

என்னைக் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதால் , சற்று விளக்கமாகவே அதன் கதை.

குடும்பத் துன்பங்களைத் தீர்க்கவென தன் உடலை விற்கும் ஒரு பெண்ணின் கதையே அரங்கேற்றம்.

ஏழை பிராமணன் எஸ்.வி.சுப்பையா..அவரது மனைவி எம்.என்.ராஜம்.வத வதவென குழந்தைகள்.மூத்தப் பெண் பிரமிளா.ஒவ்வொரு குழந்தைகளும் ஒரு லட்சியத்தை அடைய நினைக்கின்றனர்.ஆனால் வறுமை ..ஒரு வேளை சாப்பாட்டுக்கே பஞ்சம்.இந்நிலையில் மூத்தவள் பிரமிளா..அவர்கள் லட்சியத்தையடையவும்.குடும்பம் துன்பத்திலிருந்து விடுபடவும் விலைமகளாகிறாள்.

அப்படி அவளை துரத்தியதும்...குடும்பத்தில்..தன் தம்பியின் மருத்துவராக வேண்டும் என்னும் ஆசையை நிறைவேற்ற ஒரு அரசியல்வாதியை அவள் சந்திக்கையில்..அவனால் சீரழிக்கப்படுகிறாள்.அவளின் ஒரு தங்கை தன் ஆசைப்படி பாடகி ஆகிறாள்.தம்பி மருத்துவம் படிக்கிறான்.குடும்பம்.ஒரு த்ங்கைக்குக் கல்யாணம் ஆகிறது. மகிழ்ச்சியில்  மிதக்கிறது குடும்பம்.

ஆனால்...ஒருநாள், அவள் எப்படி பணம் சம்பாதிக்கிறாள் என்பதை அறிந்த  குடும்பம் அவளை ஒதுக்குகிறது.ஆனால் அவள் மீது இரக்கப்பட்டு, அவளை மணக்க வருகிறான் ஒருவன்.ஆனால், அவளோ பைத்தியமாகி ஒடுகிறாள்.

இக்கதையை அற்புதமாக படமாக்கி திரையில் புதுமையைப் புகுத்தி புதுமை இயக்குநர் ஆனார் கேபி.படத்திற்கு சென்சார் "A" செர்டிஃபிகேட் வழங்கினர்.முன்னதாக பலவருடங்களுக்கு முன் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படம் "ஏ" செர்டிஃபிகேட் பெற்றது.

குழந்தை நட்சத்திரமாக, "களத்தூர் கண்ணம்மா" "பார்த்தால் பசி தீரும்" ஆனந்த ஜோதி ஆகிய படங்களில் நடித்திருந்த "கமல்ஹாசன்" இப்படத்தில் இளைஞனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலசந்தரின் கூர்மையான வசனங்கள் படத்தில் நிறையக் காணப்பட்டது.

உதாரணத்திற்கு..

,பிரமிளாவின். மேலாடை நழுவ..அம்மா..ஆண்கள் இருக்கும் போது இப்படி மேலாடை நழுவுவதைக் கண்டிக்கையில் அவர்< "ஆம்பளைங்கறதே மரத்துப் போச்சு' என்று சொல்லும் வசனமும்..பின்னர் ஓரிடத்தில், "நாங்க எல்லாம் தமிழ் நாட்டு பொம்பளைங்க...தலை நிமிர்ந்து வீதிக்கு வெளியே பார்க்கும் வழக்கம் நமக்கில்லை' என்ற வசனமும் ஒரு பானை சோத்திற்கான பதம்.

வி.குமார் இசையில் கண்ணதாசன் பாடல்களும் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தன.

"ஆண்டவனின் தோட்டத்திலே"
"மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா?"
+மூத்தவள் நீ கொடுத்தாய்"

ஆகிய பாடல்களின் வரிகளும்..இசையும்..படமாக்கியவிதமும் அருமை.

மொத்தத்தில் பாலசந்தருக்கு மாபெரும் திருப்புமுனை இப்படம் எனலாம். 

No comments:

Post a Comment