Monday, January 12, 2015

14-மன்மத லீலையும், மூன்று முடிச்சும்



மன்மத லீலை, மூன்று முடிச்சு,Anthuleni katha (தெலுங்கு) (இப்படம் அவள் ஒரு தொடர்கதை), தூர்பு படமரா (அபூர்வ ராகங்கள் தெலுங்கு) ஆகியவை 1976ல் வந்த படங்கள்.

மன்மத லீலை படத்தில் பெண்களை ஏமாற்றி அவர்கள் கற்பை சூறையாடும் நெகடிவ் பாத்திரத்தை கமல் ஏற்றிருப்பார்.இப்படம் ரசிகர்கள், ஊடகங்கள் பாராட்டுகளையும், அதே அளவிற்குக் கண்டனங்களையும் பேற்றது.பத்து, இருபது வருடங்களுக்குப் பின் வரவேண்டிய படம் என்று ஒரு சாரார் விமரிசித்தனர்.அது உணமை என காலம் சொல்கிறது இப்போது.

இப்படத்தில் கமல், ஹாலம், ஜெயபிரதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர்  நடித்திருந்தனர்.ராதாரவி இப்படத்தில் அறிமுகமானார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், மனைவி அமைவதெல்லாம் என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலும், ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "ஹலோ மை டியர் ராங் நம்பெர் பாடலும், "நாதமெனும் கோயிலிலே" என்ற வாணி ஜெயராம் பாடிய பாடலும் பட வெற்றிக்கு வலு சேர்த்தது.

அடுத்து வந்த படம் "மூன்று முடிச்சு"

பிரசாத், பாலாஜி இருவரும் நண்பர்கள்.பாலாஜி செல்வியைக் காதலிக்கிறான்.செல்வியும் பாலாஜியை விரும்புகிறாள்.ஆனால் பிரசாத்திற்கு செல்வியின் மீது ஒரு கண்.பாலாஜியின் காதலை பிரசாத் சீர்குலைக்கச் செய்வதை செல்வி பாலாஜியிடம் சொன்னாலும்..பாலாஜி அதை நம்புவதில்லை.அந்த அளவிற்கு நண்பனை , நட்பை விரும்புபவன் அவன்.

ஒருநாள் அவர்கள் சுற்றுலா செல்கையில்..ஒரு ஏரியில் படகு சவாரி செய்கிறார்கள்.அப்போது பாலாஜி தவறி ஏரியில் விழ அவனைக் காப்பாற்றவில்லை பிரசாத்.பாலாஜி இறக்கிறான்.பிரசாத்தின் வீட்டிற்கு வேலைக்கு வரும்செல்வி, பிரசாத்தின் தந்தையை மணக்க நேரிடுகிறது.பிரசாத் வீட்டிற்கு வருகையில் இது தெரிகிறது.அம்மா என்னும் நிலையில் செல்வி பிரசாத்தை பழி வாங்குகிறாளா? எப்படி? என்பதே கதை.

பிரசாத்தாக ரஜினியும், பாலாஜியாக கமலும் செல்வியாக ஸ்ரீதேவியும் நடித்தனர்.இப்படத்தில் ரஜினியின் நடிப்பு பிரமாதம்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், "வசந்தகால நதிகளிலே" என்ற ஜெயசந்திரன், வாணி ஜெயராம் பாடிய பாடல் குறிப்பிடத்தக்கது.

இப்படம் மலையாளத்தில் "மட்டொரு சீதா' என்ற பெயரில் வந்தது.அதில் தமிழில் ரஜினி ஏற்ற பாத்திரத்தை கமல் ஏற்றார்.

தெலுங்கில் "ஓ சீதா கதா" என்ற பெயரில் வந்தது. 

No comments:

Post a Comment