Tuesday, January 13, 2015

15- சிறந்த படங்களில் ஒன்று



அவர்கள், பட்டிணப்பிரவேசம்,aayina (ஹிந்தி) ஆகியவை பாலசந்தரின் பெயரைத் தாங்கி 1977ல் வந்தவை.

அவர்கள் படத்தில் சுஜாதா, கமல் ஹாசன்,ரஜினி, ரவிகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.பாலசந்தரின் மிகச் சிறந்த படங்களில் ஒதுவும் ஒன்று.

அனு, பரணியைக் காதலிக்கிறாள்.அவளது தந்தைக்கு பம்பாய் (இன்றைய மும்பை)க்கு மாற்றலாகிறது.ஆகவே குடும்பமே பம்பாய்க்குக் குடிப் பெயர்கிறது.அங்கிருந்து பரணிக்கு அனு எழுதிய கடிதங்களுக்கெல்லாம் பதில் இல்லை.இதற்கிடையே, அனுவின் தந்தை நோய்வாய்ப்படுகிறார்.அப்போது, அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ராமனாதன் மிகவும் உதவியாய் இருக்கிறான்.இதுவே..அவன் அனுவை மணமுடிக்கக் காரணமாய் இருக்கிறது.அனுவும், ராமனாதனை மணக்கையில், தனது முந்தைய காதலைப் பற்றியும் சொல்கிறாள் அவனிடம்.அது வினையாகிறது.ராமநாதன் அனுவை வேதனைப் படுத்தி ரசிக்கிறான்.அனு அவனிடமிருந்து விவாகரத்து பெற்று, கையில் குழந்தையுடன் சென்னை வருகிறாள்.

சென்னையில் வேலைப் பார்க்கும் அனுவிற்கு, ராமநாதனே மேலதிகாரியாய் வருகிறான்.அனுவுடன் வேலை செய்யும் சக ஊழியர் ஜனார்தனம் மனைவியை இழந்தவர்.அவர் அனுவை விரும்புகிறார்.அனு பரணியையும் சந்திக்க, தான் எழுதிய கடிதங்கள் அவனிடம் போய்ச் சேரவேயில்லை என அறிகிறாள்.மனம் திருந்திய ராமனாதனும், மீண்டும் அவனை மணக்க விரும்புகிறான்.

ஒரு பக்கம் அனு..மறுபக்கம் ராமனாதன், ஜனார்தனம், பரணி.....

அனு என்ன முடிவெடுக்கிறாள் ..என பாலசந்தருக்கே உரித்தான பாணியில் கதை முடிகிறது.

இப்படத்தில், சுஜாதா, அனுவாகவும், ராமனாதனாக ரஜினியும், ஜனர்தனாக கமலும், பரணியாக ரவிகுமாரும் நடித்தனர்.

எம்,எஸ்.விஸ்வனாதன் இசையில் ஜானகி பாடிய, "காற்றுக்கென்ன வேலி" "இப்படியே ஒரு தாலாட்டு" பாடல்களும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சதனும் சேர்ந்து பாடிய "ஜூனியர்" பாடலும் பட வெற்றியில் பங்கேற்றன எனலாம்.

சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது சுஜாதாவிற்குக் கிடைத்தது.

அடுத்து வந்த படம் "பட்டிணப்பிரவேசம்"

விசு அவர்கள் நாடகம் இது.அதே பெயரில் பாலசந்தர் திரைப்பட மாக்கினார். டெல்லி கணேஷ்..பெரியத் திரைக்கு அறிமுகமான படம்.

கிராமத்திலிருந்து ஒரு குடும்பம் பிழைப்புத் தேடி பட்டிணம் வருகிறது. ஆனால் பட்டிணப்பிரவேசம் அவர்களுக்கு இன்பத்தைத் தரவில்லை.மேலும், மேலும் துன்பங்களையேத் தருகிறது.முடிவில் அக்குடும்பம் மீண்டும் கிராமத்திற்கேச் செல்கிறது.

மீண்டும் அவர்கள் செல்லும் போது, "நன்றி..மீண்டும் வருக" என்ற பலகையைக் காட்டி..பாலசந்தர் படத்தை முடித்திருப்பது பேசப்பட்டது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எஸ்.பி.பி., பாடிய "வான் நிலா...நிலா அல்ல" என்னும் பாடல் ஹிட்.

அடுத்து வந்த Aaina என்னும் ஹிந்திப்படம் (கதை பாலசந்தர்) அரங்கேற்றம் படக்கதையாகும்.இதில் ராஜேஷ் கன்னா, மும்தாஜ் நடித்தனர்.

No comments:

Post a Comment