Wednesday, January 28, 2015

31-புதுப்புது அர்த்தங்கள்

                 

மணிபாரதி ஒரு பிரபலமான மெல்லிசைப்பாடகன்.அவனது மனைவி கௌரி.தன் கணவன் தனக்கு மட்டுமே உரியவன் என்று அதீத அன்பு கொண்டவள் கணவன் மீது. ஆனால் அந்த எண்ணமே கணவனின் பெண்ரசிகைகளைப் பார்க்கையில் சந்தேகத்தையும் ஏற்பட வைக்கிறது.அதற்கேற்றாற் போல அவளது தாயும் அவ்வப்போது சந்தேகத்தி உண்டாக்கிறாள் கௌரியின் மனதில்.இவர்களுடைய அதிகாரம்.சந்தேகம்..ஆகியவற்றை பொறுக்கமுடியாமல் மணிபாரதி வீட்டைவிட்டு ஓடுகிறான்.

வடக்கே போய்..ஒரு உணவகத்தில் வேலை செய்கிறான்.

அதே நேரம் ஜோதி என்னும் பெண் ஒருத்தி, தன் கணவனின் கொடுமையைத் தாங்கமுடியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

கோவாவில், மணீபாரதியும், ஜோதியும் சந்திக்கின்றனர்.அவர்களிடையே ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.அங்கு வயதான ஒரு மலையாளி தம்பதியினரை சந்திக்கின்றனர்.அவர்களிடையே இருக்கும் அந்நியாந்நியமும், காதலும் இவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனிடையே, மணிபாரதியின் செயலாளரிடமிருந்து மணிபாரதிக்கு, கௌரி உடல்நலமில்லாமல் இருப்பதாகச் செய்தி கிடைக்கிறது.உடனே, அவன், ஜோதியுடன் கௌரியைப் பார்க்க வருகிறான்.ஆனால் ஜோதியை கௌரி பார்க்க விரும்பவில்லை.மணிபாரதி அதற்காக கௌரியைக் கோபிக்க, அவள் அவனிடம் இருந்து விவாகரத்து கோருகிறாள்.பின் கௌரி தான் ஒரு கிரிக்கெட் வீரனை மணக்க முடிவெடுக்கிறாள். ஆனால், அவனோ திருமணமானவன் எனக் கூறி யமுனா என்ற பெண் திருமண மண்டபத்தில் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதனால் உடல்நலம் பாதிக்கப் பட்ட கௌரியைப் பார்க்க மணிபாரதி வருகிறான். ஜோதியை, மணிபாரதி மணமுடிக்க இருப்பதை அறிந்த ஜோதியின் கணவனும் அவளைத் தேடி வருகிறான்.அப்போதுதான் ஜோதி, தன் கணவன் தன்னை தன் உயிரினும் மேலாக நேசிப்பதை உணருகிறாள்.

கௌரியும் மனம் மாறி மணீபாரதியுடன் இணைகிறாள்.

மணிபாரதியாக ரஹ்மானும், ஜோதியாக சித்தாராவும், கௌரியாக கீதாவும், கௌரியின் அம்மாவாக ஜெயசித்ராவும், மணிபாரதியின் செயலராக விவேக்கும் நடித்தனர்.வயதான தம்பதிகள் பாத்திரத்தில் பூர்ணம் விஸ்வநாதனும், சௌகார் ஜானகியும் நடித்தனர்.இளையராஜாவும் ஒரு பாடல் காட்சியில் வருவார்.

இளையராஜா இசையில்..


எடுத்து நான் விடவா..._ எஸ்.பி.பி., இளையராஜா
எல்லோரும் மாவாட்ட-எஸ்.பி.பி.,ஷைலஜா
குவாயூரப்பா   - எஸ்.பி.பி., சித்ரா
கல்யாணமாலை -1 -இளையராஜா, எஸ்.பி.பி.,
கல்யாணமாலை-2 - எஸ்.பி.பி.,
கேளடி கண்மனி  - எஸ்.பி.பி.

ஆகியோர் பாடிய அனைத்து பாடல்களும் அருமை.

சிறந்த இயக்குநர் என ஃபில்ம் ஃபேர் விருதும்
தமிழ் மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதும் பாலசந்தருக்குக் கிடைத்தது.

1989ஆம் ஆண்டு வந்த் கேபியின் படம் இது.

No comments:

Post a Comment