Tuesday, January 20, 2015

22-தண்ணீர் தண்ணீர்

                 

1981 ஆண்டு வெளியான தண்ணீர் தண்ணீர்..ஒரு திருப்புமுனை படமாய்த் திகழ்ந்தது.கோமல் சுவாமினாதன் அவர்களால் மேடையேற்றப்பட்ட நாடகம் இது.மிகவும் பாராட்டப் பட்ட இந்நாடகம் பாலசந்தர் கைவண்ணத்தில் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றியையும், மக்களின் அமோக பாராட்டுதல்களையும் பெற்றது.

கோவில்பட்டியின் அருகில் உள்ள கிராமம் அத்திப்பட்டு.வானம் பார்த்த பூமி.குடிநீருக்கே மக்கள் அவதிப்படுகின்றனர்.இது குறித்து அரசியல்வாதிகளோ, அரசோ எவ்வளவு மனுக்களைக் கொடுத்தபோதும் , அவை வீணாகவே போடப்பட்டன.அந்த ஊர் மக்கள் அன்றாட வாழ்வே பெரும் போராட்டமாக ஆனது.

மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர் கொண்டுவர முயல்கின்றனர்.

இதனிடையே, பண்ணையார் ஒருவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு , காவல்துறையால் தேடப்பட்டு வந்த ஒருவன்.கிராமத்தினுள் நுழைந்து, மக்களுக்கு பத்து மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்திலிருந்து தண்ணீர் கொண்டுவர முயலுகிறான்.

அதுவரை, அத்திப்பட்டு பற்றி கவலைப்படாத அரசு அதிகாரிகள், மக்கள் சட்டத்திற்கு விரோதமாக மக்கள் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

கிராமங்களில் நிலவும் முதலாளித்துவம். மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி, அரசின் சிவப்புநாடாத்தனம் ஆகிய அனைத்தையும் தோலுரித்து காட்டப்படுகிறது இப்படம்.

சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த திரைக்கான தேசிய விருதையும் கேபிக்கு பெற்றுத் தந்த படம்.

சிறந்த தமிழ்ப்படம், மற்றும் சிறந்த தமிழ்ப்பட இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் கேபி பெற்றார்.

இப்படத்தில் சரிதா, ராதாரவி தவிர மற்ற பெரும்பாலான நடிகர்கள்..மேடையில் நடித்தவர்களே.கேபியின் நாடகப் பற்றிற்கு இதுவும் ஒரு சான்றாகச் சொல்லலாம்.

கதை, வசனத்தை கோமல் சுவாமினாதனை வைத்தே எழுதச் கொன்னது..இயக்குனரின் பெருந்தன்மை எனலாம்.

பாடல்கள் கண்ணதாசன், வைரமுத்து எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.

கலாகேந்திரா தயாரிப்பான இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் பொறுப்பை கேபி ஏற்றார். 

No comments:

Post a Comment