Saturday, January 17, 2015

19- நூல்வேலி

                                     

தனது மகளைப் போல பாசம் காட்டி வளர்த்த இளம்பெண்ணைத் தாயாக்கிய கதை நூல்வேலி.

இப்படமும் 1979ல் வந்த..சர்ச்சைக்குரிய, பாலசந்தரின் கூரிய வசனங்களுடன் வந்த படம் எனலாம்.

துணைநடிகை ஒருவரின் அப்பாவி வெகுளிப் பெண் சரிதா.இவர்களது பக்கத்து வீட்டில் குடிவருகிறார் சரத்பாபு.அவரது மனைவி சுஜாதா.அவர் ஒரு எழுத்தாளர்.இவர்கள் வெளீயே செல்லும் போது இவர்களது குழந்தையுடன் விளையாடுவார் சரிதா.அப்பாவியான சரிதாவை தன் வீட்டில் சுதந்திரமாக வலம் வர அனுமதித்தனர் தம்பதிகள்.

சரிதாவின் தாயார் இறந்ததும்,ஆதரவின்றி இருக்கும் சரிதாவை தன் மகளைப் போல வளர்க்கிறார் சுஜாதா.சரத்பாபுவும் அவள் மீது பாசத்துடன் இருக்கிறார்.ஒருநாள் கொட்டும் மழையில் நனைந்தவாறே வருகிறார் சரிதா.மழையில் நனைந்த சரிதாவின் இளமை சரத்பாபுவின் காமத்தைத் தூண்ட, சரிதா ஒரு வெகுளி என்பதையும், தனது மகள் போன்றவள் என்பதையும் மறந்து வெறித்தீர்க்கிறார்,

இது சுஜாதாவிற்குத் தெரியவர அவர் தன் குழந்தையுடன் வெளியேறுகிறார்.சரிதா, குழந்தையைப் பெற்றுவிட்டு, அதை சரத்பாபுவிடமும், சுஜாதாவியமும் ஒப்படைத்துவிட்டு..அவர்கள் குடும்பத்தில் அமைதித் திரும்ப வேண்டுமென்றால் அது தனது மரணத்தால் மட்டுமே முடியும் என 9ஆம் மாடியில் இருந்து விழுந்து இறக்கிறாள்.

"படிச்சவங்க இல்லையா? அவங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்" என இப்படத்தில் பாலச்ந்தரின் வசனம் அக்காட்சிக்கு மிகவும் அருமையாய் இருக்கும்.

வெகுளிப் பெண்ணாக சரிதாவின் நடிப்பு சூப்பர்.தவிர்த்து சரத் பாபு. சுஜாதா ஆகியோரும் பாத்திரம் அறிந்து நடித்திருப்பர்.மௌலியும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருப்பார்.

கமல் ஹாசன் சிறப்புத் தோற்றம்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே" என்ற கண்ணதாசன் பாடல் காலம் கடந்தும் நினைவை விட்டு அகலாதது.தவிர்த்து வாணிஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமனியம் பாடிய ''நானா பாடுவது நானா" பாடலும். எஸ்.பி.பி. தனித்து பாடிய "தேரோட்டம் " பாடலும் குறிப்பிடத்தக்கவை.

ஒரே சமயத்தில் இப்படம்"guppedu manasu" என்று தெலுங்கில் எடுக்கப்பட்டது.

பாலசந்தர் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தப் படங்களில் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment