Wednesday, January 14, 2015

16- நிழல் நிஜமாகிறது..தப்புத்தாளங்கள்

1978 ஆம் ஆண்டு வந்தவை

வெங்கடாச்சலம், இந்துமதி இருவரும் உடன்பிறப்புகள்.இந்துமதி ஆண்களை வெறுப்பவள்,.திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன் என இருப்பவள்.சஞ்சீவி என்னும் அவர்கள் நண்பன் அவ்வப்போது அவர்கள் வீட்டிற்கு வருவான்.இந்துமதியை சீண்டி விளையாடுவான்.சஞ்சீவி, அவளை விரும்புகிறான்.இந்துவும் அவனை விரும்பினாலும், அவளது கொள்கை தடுக்கிறது.

திலகம் என்னும் பெண் வெங்கடாச்சலம் வீட்டு வேலை செய்யும் பெண்.அவளது, கள்ளம் கபடம் அற்ற மனது வெங்கடாச்சலத்திற்குப் பிடிக்கிறது.அவளை விரும்புகிறான்.ஒருநாள், திலகம் தன்னால் கருவுற்று இருப்பதை அறிந்தவன், சமூகத்திற்கு பயந்து அவளை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான்.ஆனால், சஞ்சீவி அவளை வெங்கடாச்சலம் வீட்டில் வேலை செய்யும்  மற்றொரு வேலையாள் காசியின் வீட்டில் தங்க வைக்கிறான்.அங்கு அவளுக்குக் குழந்தை பிறக்கிறது.

சஞ்சீவியின் ,தூண்டுதலால் வெங்கடாச்சலம் தன் தவற்றை உணர்ந்து திலகத்தை ஏற்க சம்மதிக்கிறான்.ஆனால் அவளோ, தான் கருவுற்றிருந்த வேளையில் தன்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்ட காசியுடனேயே இருக்க முடிவெடுக்கிறாள்

சஞ்சீவியை இந்துமதி மணக்கிறாள்.இப்படத்தில் வெங்கடாச்சலமாக சரத்பாபுவும்,திலகமாக ஷோபா வும், இந்துவாக சுமித்ராவும், சஞ்சீவியாக கமலும், காசியாக ஹனுமந்துவும் நடித்தனர்.மௌலியும் இப்படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.

திரைக்கதை வசனம் இயக்கம் பாலசந்தர்.இது "chilakamma cheppindi" என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.

எம்.எஸ்.விஸ்வனாதன் இசையில் எஸ்.பி.பி. பாடிய , கண்ணதாசனின் பாடல்"கம்பன் ஏமாந்தானும்" வாணிஜெயராமுடன் பாடிய "இலக்கணம் மாறுதோ" பாடலும் பெரும் வரவேற்பப் பெற்றன.

1978ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்துடன் ,அதே ஆண்டு வந்த மற்றொரு படம்"தப்புத் தாளங்கள்"

ரஜினி,சரிதா,பிரமிளா ஆகியோர் நடித்திருந்தனர்..கன்னடத்தில் தப்பிடத்தாளா என்ற பெயரிலும், தெலுங்கில் கழுகன் என்ற பெயரிலும் வந்த படம்.

விஜயபாஸ்கர் இசையில் வாணிஜெயராம் பாடிய "அழகான இளமங்கை" என்ற பாடலும், எஸ்.பி.பி.யின் "என்னடா பொல்லாத வாழ்க்கை' என்ற பாடலும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இப்படத்திற்கு சிறந்த வசனகர்த்தாவாக  பாலசந்தருக்கு தமிழக ஸ்டேட் ஃபில்ம் விருது கிடத்தது.

சரசு ஒரு விலை மகள்.ரஜினி, கூலிப்படையைச் சேர்ந்தவர்.பணத்திற்கேற்றாற் போல எந்த சமூகவிரோதச் செயல்கள் செய்யவும் தயங்காதவர்.அவர்களுக்குள்ளே பிறக்கும் அன்பும்...அதற்குப் பின் சரசு விலைமகளாய் இருப்பதால் படும் பாடும்...ரஜினி செய்த குற்றத்திற்கு சிறை செல்வதும் ....கதை இப்படியாகப் போகும்..பல புரட்சிகரமான கருத்துகளை தனது கூர்மையான வசனங்களில் சொல்லியிருப்பார்.

இதில் கமல் சரசுவிடம் வரும் வட இந்திய வாடிக்கையாளராக வருவார்

படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.ஆயினும்..சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாராட்டப்பட்டது.மக்கள் வரவேற்பைப் பெற்றது.

இது, பாலச்ந்தர் ஒரு தீக்கதரிசி என்பதும்...பத்தாண்டுகளுக்குப் பின் யோசிக்க வேண்டியதை முன்னரே யோசித்தார் என்பதும் தெளிவு..

No comments:

Post a Comment