Saturday, January 10, 2015

11- ஒரு படம்...ஐந்து மொழிகளில்...



1974ஆம் ஆண்டு பாலசந்தருக்கு மிக முக்கியமான ஆண்டு எனலாம்.

கலைமகள் மாத இதழில் எம்.எஸ்.பெருமாள் என்பவர் எழுதியக் கதையை மூலக்கதையாக்கி, தன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில், அவரது நண்பரான இராம.அரங்கண்ணல் தயாரிக்க வெளிவந்தப் படம்"அவள் ஒரு தொடர்கதை" .இது வெள்ளிவிழா படம்.

இப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் பட இயக்குநருக்கான ஃபில்ம் ஃபேர் அவார்ட் கிடைத்தது.

சுஜாதா, விஜயகுமார்,ஸ்ரீபிரியா, ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஜெய்கணேஷ் ,விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

சுஜாதாவிற்கு தமிழில் இது முதல் படமாக அமைந்தது.இப்படம் ஐந்து மொழிகளில், டப்பிங் ஆகவோ ரிமேக் ஆகவோ வந்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் "அந்துலேனிக் கதா".இயக்கமும் பாலசந்தரே. இப்படத்தில் தமிழில்  ஜெயகணேஷ் ஏற்ற வேடத்தை ரஜினி ஏற்றார்.
"அவள் ஒரு தொடர்கதா" என மலையாளத்தில் படம் டப் செய்யப்பட்டது..

வங்காளத்தில் "கபிதா" என்று ரீமேக் ஆனது.கமல்ஹாசன், தமிழில் தான் ஏற்றப் பாத்திரத்தையே இதிலும் ஏற்றார்.கமலுக்கு வங்காளத்தில் இது முதல் படமாய் அமைந்தது.

ஜீவன்தாரா என்ற பெயரில் ஹிந்தியில் வந்தது.

"benkiyalli avalita hoov" என கன்னடத்தில் சுஹாசினி நடிக்க வெளி வந்தது.கன்னடத்தில், பஸ் கண்டக்டராக சிறு வேடத்தில் கமல் நடித்தார்.

படத்தின் கதைச்சுருக்கம் இதுதான்-

கவிதா...நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வேலைக்குச் செல்லும் பெண்.அவள் வேலைக்குச் சென்று, கணவனை இழந்து வீட்டில் உள்ள சகோதரி,கல்யாணத்திற்கு இருக்கும் மற்றொரு சகோதரி, கண் பார்வையற்ற தம்பி,அவளது தாயார்,தவிர்த்து குடுபத்தின் கஷ்டம் தெரியா குடிகார சகோதரன் ஆகியோரைக் காப்பாற்றியாக வேண்டும்.அவளது தந்தை குடும்பத்தை விட்டு ஓடி விட்டவர்.குடிகார சகோதரன் குடும்பத்திற்கு உதவாக்கரையாக இருப்பதோடு மட்டுமன்றி அவ்வப்போது பிரச்னைகளையும் கொண்டு வருபவனாக இருக்கிறான்.

கவிதாவைக் காதலிப்பவன், அவளைக் கல்யாணம் செய்துக் கொள்ளக் கூற அவளோ, குடும்பப் பொறுப்பிற்காக மறுக்கிறாள்.அதனால், அவளது காதலன், கணவனை இழந்த அவளது மற்ற சகோதரியை மணக்கிறான்.தான் காதலித்த கவிதாவின் சகோதரிக் கிடைக்காததால்..கவிதாவின் தோழியைக் கமல்ஹாசன் மணக்கிறார்.

கடைசியில், கவிதாவின் பொறுப்பற்ற சகோதரன் திருந்த, தன்னுடைய அலுவலக அதிகாரியை கவிதா மணக்க சம்மதிக்கிறாள்.ஆனால்..அவளது எண்ணம் நிறைவேறியதா...என்பதை பாலசந்தருக்கே உரித்தான திருப்புமுனைகளுடன் அழகாக சொல்லியிருப்பார் இயக்குநர்.

இப்படத்தில் கமல் நடித்தப் பாத்திரம் மிமிக்ரி செய்யும் பாத்திரம்.அதற்காகவே கமல் அக்கலையைக் கற்றார்.

எம்.எஸ்.விஸ்வனாதன் இசையில்..

எஸ்.பி.பி., பாடிய "கடவுள் அமைத்து வைத்த மேடை", எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "அடி..என்னடி உலகம்", ஜேசுதாஸ் பாடிய "தெய்வம் தந்த வீடு" ஆகிய பாடல்கள், இன்றும் ரசிகர்களை முணுமுணுக்க வைப்பவை ஆகும்.

கேபி, முந்தைய படத்திலும், குடும்பத்திற்காக உடலை விற்ற பெண்ணையும், இப்படத்தில் குடும்பத்திற்காக தன் எதிர்கால வாழ்வையே தியாகம் செய்த பெண்ணையும் படைத்து...திரையில் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment