Friday, January 30, 2015

33- வானமே எல்லை

               

1992ல் வந்த படம் வானமே எல்லை.திரைக்கதை, வசனம், இயக்கம் கேபி.

இப்படத்தில் ஆனந்த் பாபு,பானுப்பிரியா,ரம்யா கிருஷ்ணன், மதுபாலா,ராஜேஷ்,பப்லு பிருதிவிராஜ் மற்றும் விசாலி கண்ணதாசன் ஆகியோர் நடித்தனர்.

இளவயதுடைய ஐவரின் கதை இது.

ஆனந்த் பாபு, ஒரு நீதிபதியின் மகன்,அவனுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள் எல்லாம் அவனது தந்தைக்கு லஞ்சமாகக் கொடுக்கப் பட்டவை என்பதை அறியாதவன்.ஒருநாள் அவன் ரோபோவாக நடித்த ஊழல் பற்றிய வீடியோவைப் பார்த்த நண்பர்கள், உன் தந்தையே பெரிய ஊழல் பேர்வழி என்கின்றனர்.அதனால் கோபமடைந்தவன், நண்பர்கள் சொல்வது உண்மையானால்..தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறுகிறான்.வீட்டிற்குள் நுழையும் போது அவன் தந்தை ஒரு வழக்கிற்காக லஞ்சம் வாங்குவதைப் பார்த்துவிடுகிறான்.அவனது தந்தை அவனிடம் அதை நியாயப்படுத்துகிறார்.அவனது தாயும் , வாழ்வில் வசதிகள், பங்களா,கார் மற்றும் அவன் வைத்திருக்கும் யமகா பைக் அனைத்தும் லஞ்சத்தில்தான் வாங்கப்பட்டவை என்கிறாள்.மேலும், பணம் இல்லையெனில் அவன் இரு சகோதரிகளுக்கு மணமுடிப்பது எப்படி? என்கிறாள். தந்தை தனக்கு வாங்கிக் கொடுத்த பைக்கை எரித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான் ஆனந்த்பாபு.

பப்லு ஒரு பணக்கார வியாபாரியின் மகன்.தாய் இல்லாதவன்.அவன் சுகுணா என்ற  ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பெண்ணைக்(விசாலி கண்ணதாசன்) காதலிக்கிறான்.ஆனால், அவன் தந்தை அக்காதலை எதிர்ப்பதோடு அவனுக்கு ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிக்க விரும்புகிறார்.ஆனால். பப்லு, தன் முடிவில் உறுதியாய் இருப்பதால், தந்தையில்லாத சுகுணாவின் தாயை தான் மணந்து , சுகுணாவை, பப்லுவின் அண்ணனாக ஆக்குகிறார்.இதனால் மணமுடைந்த பப்லு வீட்டை விட்டு வெளியேறுகிறான். சுகுணா, அவர்களை வேறுவிதமாய் பழி வாங்குகிறாள். தான் ஒரு பணக்கரப் பெண் எனக் கூறிக்கொண்டு குடி பழக்கத்திற்கு ஆளாகிறாள்.

மதுபாலாவை வயதான ஒருவனுக்கு மணமுடிக்க முயலுவதால் அவரும் விட்டை விட்டு ஓடி விடுகிறாள்

ஆனால் ரம்யாவோ, பாலியல் பலாத்காரத்தால் கற்பிழக்கிறாள்.

வேறொருவன், வேலையில்லாதன்.அவன் சார்ந்துள்ள ஜாதியால் வேலை கிடைக்கவில்லை.

ஆகிய ஐவரும் எதேச்சையாக ஒரு இடத்தில் சந்திக்கின்றனர்.100 நாட்கள் சந்தோஷமாக இருந்துவிட்டு 101ஆம் நாள் தற்கொலை செய்து கொள்ளலாம் என தீர்மானிக்கின்றனர்.

ஒருகட்டத்தில், வேலையில்லாதவன், தற்கொலை எண்ணத்தை விட்டு, இவர்கள் மனதையும் மாற்ற விரும்புகிறான்.ஆனால் அதற்கு மற்றவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.அத்னால் மனமுடைந்தவன் ஒருநாள்  தற்கொலை செய்து கொள்கிறான்.

இதனிடையே, அவர்கள் தங்கியிருந்த இடத்தின் வாசலில் ஒரு குழந்தை கிடக்கிறது.அவர்கள் குழந்தையைக் கண்டதும் உணர்ச்சிவசப்படுகின்றனர்.அப்போது இறந்த நண்பனின் தந்தை ராஜேஷ் அங்கு வருகிறார். தன் மகன் இறக்க அவர்கள் நால்வரேக் காரணம் என பழி சுமத்துகிறார்.தற்கொலை முனைக்கு நால்வரும் செல்கின்றனர்.அங்கு இறந்த நண்பனைக் காணுகின்றனர்.அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்ற தான் ஆடிய நாடகமே தான் இறந்தது போல நடித்தது என்கிறான்.அவனின் தந்தையும் மற்றவ்ர்களுக்கு புத்தி சொல்வதுடன் அவர்களை ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.

அங்கு உடல் ஊனமுற்றவர்கள் தங்கள் ஊனத்தை மறந்து சந்தோஷமாக தங்களால் முடிந்த வேலையை செய்து வருவதைக் காண்கின்றனர்.அவர்கள் சாதனைகளைப் பார்த்து விட்டு...அவர்களும் சாதனை இளைஞர்களாக மாற வேண்டும் என தீர்மானிக்கின்றனர்.

மரகதமணி இசையில், "அட யாரிங்கே மனிதன்" "கம்பங்காடே கம்பங்காடே" நாடோடி ,மன்னர்களே, நீ ஆண்டவனா, சிறகில்லை ஆகிய பாடல்கள் ஹிட்.

பாலசந்தரின் வெற்றிப் பட வரிசையில் இதற்கும் இடமுண்டு.

இப்படத்திற்கு சிறந்த இயக்கிநருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்ட் கிடைத்தது.

இதே ஆண்டு வந்த மற்றொரு படம் "dilon ka rista" 

No comments:

Post a Comment