Saturday, January 31, 2015

35- டூயட்

             

1994ஆம் ஆண்டு வந்த  வெற்றி படம் டூயட்

குணாவும், சிவாவும் சகோதரர்கள்.அவர்கள் ஒரு பிரபல இசைக்குழுவை நடத்தி வருகின்றனர்.சிவா காதலிக்கிறான்.குணாவை காதலிக்கும் பெண் குணா குண்டாக இருப்பதைக் கேலி செய்து வருபவள்.ஒருசமயம், சிவாவின் காதல் தோல்வியுற, அவன் மனம் உடைகிறான்.அவனுக்கு ஆறுதல் சொல்ல, இட மாற்றம் வேண்டுமென அவர்கள் இடம் மாறுகிறார்கள்.குணாவின் தந்தைக்கு ஊருக்குத் தெரியாமல்சீதம்மா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது.அவர் இறக்கையில் சீதம்மாவிற்குப் பிறந்த பெண்ணை குணா காப்பாற்ற வேண்டும் என வாக்குறுதியைப் பெறுகிறார்.

தாயில்லா குணா, சீதம்மாவை, அவள் பெண்ணுடன் தன்னிடம் வந்து இருக்கும்படிக் கூறுகிறாள்.ஆனால், சீதம்மா அவர்களுக்குள் இருக்கும் உறவுத் தெரியக் கூடாது எனச் சொல்லி, ஒரு சமையல்காரியாய் வீட்டினுள் நுழைகிறாள்.

குணா, சாக்ஸஃபோன் வாசிப்பவனாகவும்,பாடலாசிரியனாகவும்,இசை இயக்குநன் ஆகவும் இருக்கிறான்.ஆனால் சிவா பாடுபவனாக உள்ளான்.

குணாவின் பக்கத்து வீட்டில் அஞ்சனா என்னும் நடன இயக்குநர் வசிக்கிறாள்.குணா, சிவா இருவருமே அவளிடம் காதல்வயப் படுகின்றனர்.சிவாவோ, அவளைத் தேடிப் போய் தன் காதலைச் சொல்கிறான்.ஒருநாள் அவள் சாக்ஸோஃபோன் இசைக் கேட்கிறாள்.அது சிவா வாசிப்பதாய் எண்ணுகிறாள்.அதனால் அவள் சிவாவை விரும்ப ஆரம்பிக்கிறாள்.சிவாவும், சாக்ஸோஃபோன் வாசித்தது தான் தான் என பொய் சொல்கிறான்.குணாவோ தான் குண்டாய் இருப்பதால், நேரடியாக அஞ்சனாவைப் பார்க்காது, அவளின் தந்தையிடம் நட்புக் கொண்டு அவளின் காதலைப் பெற நினைக்கிறான்.இதனிடையே குணாவிடம் அஞ்சனா, "சாக்ஸஃபோன் இசைக் கேட்டதாயும், அதைத் தான் விரும்புவதாகவும் சொல்கிறாள்.அதனால் அவள் விரும்புவது தன்னைத்தான் என எண்ணுகிறான் குணா.

இந்நிலையில், சினிமா நடிகர் திலீப் அஞ்சனாவை விரும்ப, அவனுடன் அஞ்சனா பழகுவது சிவாவிற்குப் பிடிக்கவில்லை.தவிர்த்து அஞ்சனாவை மையமாகக் கொண்டு சிவா, குணா இருவரிடையே தகராறு வர, சீதம்மா அஞ்சனா சிவாவையே விரும்புவதாகக் கூறுகிறாள். மேலும்,சிவா, தோல்வியைத் தாங்கமாட்டான் எனக் கூறி  .குணாவிடம் அவளை மறக்கக் கூறுகிறாள்.

ஒருநாள், அஞ்சனாவிற்கு, சிவா சாக்ஸோஃபோன் வாசிக்கிறேன் என்று சொன்னது பொய் என அறிகிறாள்.மேலும், தன்னால் அவர்களுக்குள் சண்டை வேண்டாம் என்றும், தன் மீது உள்ள காதலை அவர்கள் விட்டுவிட வேண்டும் எனவும் கூறுகிறாள்.

இதனிடையே, திலீப் அஞ்சனாவிடம், தன்னை மணக்கும்படிச் சொல்கிறான்.அவள் மறுக்க, அவனோ..ஊடகங்களுக்கு விரைவில் அஞ்சனாவை தான் மணக்க இருப்பதாகப் பேட்டி கொடுக்கிறான்.அதைப் பார்த்த குணா, அஞ்சனா தன்னையும், சிவாவையும் ஏமாற்றியதாக சொல்கிறான்.ஆனால், அஞ்சனாவும், அவளது தந்தையும் இதை மறுப்பதுடன், அவள் தந்தை அஞ்சனா சாக்சோஃபோன் இசையில் மயங்கியே, அதை வாசிப்பவனை விரும்பியதாகவும், அதனால் குணா அவளை மணக்க வேண்டும் என்கிறார்.திலீப் அஞ்சனாவைக் கடத்த, குணா அவனிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறான்.திலீப் குணாவை மலையுச்சிலிருந்து தள்ளிவிட முயலுகையில் குணாவைக் காப்பாற்றி சிவா உச்சியிலிருந்து விழுந்து மடிகிறான்.

இறுதியில் குணா, அஞ்சனாவை மணக்கிறான்.

குணாவாக பிரபுவும், ரமேஷ் அரவிந்த் சிவாவாகவும், அஞ்சனா வாக மாதுரி தீக்க்ஷித்தும், திலீப்பாக பிரகாஷ்ராஜும் நடித்தனர். மற்றும் சார்லி, சரத்பாபு செந்தில் நடித்தனர்.கமல்ஹாசன் சிறப்புத் தோற்றம்.
பிரகாஷ்ராஜிற்கு இது முதல் படமாகும்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

அஞ்சலி..அஞ்சலி - எஸ்.பி.பி., சித்ரா
வெண்ணிலவின் தேரில் ஏறி - ஜேசுதாஸ்
மெட்டுப்போடு - எஸ்.பி.பி., பி.சுசீலா
கத்திரிக்காய்..கத்திரிக்காய் - சுஜாதா, பிரசன்னா
குளிச்சா குத்தாலம்- எஸ்.பி.பி.,  அகியோர் பாடினார்.

படத்தின் தலைப்பு சாக்ஸோஃபோன் இசையை கதரி கோபால்நாத் வாசித்தார்.மற்ற சாக்ஸோஃபோன் இசை ராஜு வாசித்தார்.

தெலுங்கில் இதே பெயரிலும், ஹிந்தியில் "Tu hi mera dil' என்ற பெயரிலும் வந்தது.

No comments:

Post a Comment