Thursday, January 15, 2015

17-மரோ சரித்திராவின் மாபெரும் வெற்றி

                                   

"மரோ சரித்ரா" வந்த ஆண்டு 1978.பாலசந்தரின் நண்பர் இராம அரங்கண்ணலுக்காக பாலசந்தரின் திரைக்கதை வசனம் இசையில் வெளிவந்த படம்..இல்லையில்லை காவியம் எனலாம்.

ஒரு தமிழ் இளைஞனுக்கும், தெலுங்கு பெண்ணிற்கும் உண்டாகும் காதல்..அதற்கு பெற்றோர் போடும் தடை.நிபந்தனை ..ஆகியவையே படம்.கமல் தமிழ் இளைஞனாகவும், சரிதா தெலுங்குப் பெண்ணாகவும் நடித்திருப்பார்.

படம் ஆந்திராவில் மாபெரும் வெற்றியைப் பெற, அதை தமிழுலும், கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யாது வெளியிட்டனர்.இது 1979ல் நடந்தது.பின் 1981ல் ஹிந்தியில் "ஏக் துஜே கேலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டது.அதில் கமல் ஹாசனே கதாநாயகனாக நடிக்க, சரிதாவின் பாத்திரத்தில் ரதி அக்னிஹோத்ரி நடித்தார்.ஹிந்தியிலும் வெற்றி.சிறந்த நூறு படங்கள் வரிசையில் சிஎன் என் - ஐபிஎன் வெளியிட்ட பட்டியலில் தெலுங்கு, ஹிந்தி இரண்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கமலை முக்கிய நாயகனாகத் ததெலுங்கில் காட்ட வேண்டும் என்றே எடுக்கப்பட்டப் படம் எனலாம்.அவருக்கு ஜோடியாக 162 பெண்களிலிருந்து 19ஏ வயதான அபிலாஷாவைத் தேர்ந்தெடுத்தார். கருப்பாகவும், சற்று குண்டாகவும் இருந்த அபிலாஷா சரிப்பட்டு வருவாரா? என பலரும் சொன்னாலும், பாலசந்தர் அதில் பிடிவாதமாக இருந்தார்.அபிலாஷாவின் பெயரை சரிதா என மாற்றி வைத்தார்.வேறொரு பாத்திரத்தில் மாதவியும் நடித்தார்.

படம் முழுதும் விசாகப்பட்டிணத்திலேயே எடுக்கப் பட்டது.இந்தக் காலக்கட்டத்தில் பல வண்ணப் படங்கள் வந்தாலும், கருப்பு வெள்ளைப் படமாகவே இதை எடுக்க எண்ணினார் பாலசந்தர்.

தெலுங்கு மரோசரித்ரா 9-5-78ஆம் ஆண்டு வெளிவந்தது.ஆந்திராவில் மாபெரும் வெற்றி.இப்படத்தை அப்படியே தமிழிலோ, கன்னடத்திலோ மொழிமாற்றம் செய்யாமல், தமிழகத்திலும், கர்நாடகாவிலும் வெளியிட்டனர்.தமிழில், சென்னை சஃபையர் திரையரங்கில் 596 நாட்கள் ஓடியது.கர்நாடகாவில் 300 நாட்களுக்கு மேல் ஓடியது.

படம், ஹிந்தியில் "ஏக் துஜே கேலியே" என்ற பெயரில் தயாரானது.ஹிநிதியில் கமல், மாதவி ஆகியோரும், சரிதாவின் பாத்திரத்தில் ரதி அக்னிஹோத்ரி (ஹிந்திப் பெண்ணாக)யும் நடித்தனர்.கமல், மாதவி ஆகியோரும், பின்னணிப் பாடகராக எஸ்.பி.பி.யும் ஹிந்தியில் அறிமுகமாயினர்.

"மரோ சரித்ரா" வும், ஏக் துஜே கேலியே வும் பெற்ற வெற்றி போல இதுநாள் வரை திரையுலகில் வெற்றியை வேறு ஏதேனும் இயக்குநர்கள் சுவைத்திருப்பரா? என்பது சந்தேகமே!

தெலுங்கில், சிறந்த இயக்குநர் என இவ்வாண்டு ஃபிலிம் ஃபேர் விருது கேபிக்குக் கிடைத்தது.

ஹிந்தி பதிப்பில் எஸ்.பி.பி., பாடிய :தேரே மேரே பீச் மே" என்ற பாடல் இன்றும் பல மேடைகளில் பாடிவருவது சிறப்பு,

1978ல் இயக்குநரின் தப்புத் தாளங்கள் தெலுங்கு "தப்பிடத் தாளா"வும், இவர் கதைக்கான பொறுப்பேற்க "Bala Brikshnam" (பூவா தலையா)என்ற மலையாளப் படங்களும் வந்தன.

No comments:

Post a Comment