Friday, January 30, 2015

34- ஜாதிமல்லி

   

குஷ்பூ நடித்து பாலசந்தர் கதை வசனம் இயக்கத்தில் வந்த படம் ஜாதிமல்லி

கஜல் (Ghazel) பாடகி குஷ்பூ.அவரது தாய் கொலை செய்யப்பட்டதால், அந்த துக்கத்தை மறக்க மலை வாசஸ்தலம் ஒன்றிற்குச் செல்கிறாரங்கு ஒரு வாடகைகார் ஓட்டுநரைச் (முகேஷ்) சந்திக்கிறாள். அவரது தந்தை மனைவியைக் கொன்று விட்டு ,குடி மயக்கத்தில் குழந்தைகளையும் கொன்றார் என்ற செய்தியைக் கேட்டு..தனதுத் துயரத்தை விட அவன் துயரம் எவ்வளவு அதிகம் என எண்ணி தன் துயரத்தை மறக்க முயலுகிறார் குஷ்பூ.பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளியாகத் தங்குகிறார்.

வினீத், யுவராணி தங்களை மாஸ்கோ, பெர்லின் எனச் சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்.இருவரும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் முகேஷையும், குஷ்பூவையும் சேர்த்து வைக்க முயலுகின்றனர்.

ஒருநாள் முகேஷ், குஷ்பூவிடம்..தனது தந்தைப் பற்றித் தான் சொன்னது மிகைப்படுத்தப்பட்டது என்கிறான்.குஷ்பூவிற்கு உள்ள துக்கத்தை மறக்கடிக்க வேண்டும் எனில், அதைவிட ஒரு பெரிய துக்கத்தைச் சொல்ல வேண்டும் என்றதால் அப்படிச் சொன்னதாகக் கூறி ,தன்னை மன்னிக்கச் சொல்கிறான்.மேலும், தான் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும், ஆனால், அங்கு சொத்துத் தகராறால்..நிம்மதி இல்லாமல் இருந்ததால்..அதையெல்லாம் விட்டுவிட்டு வந்து விட்டதாகவும் சொல்கிறான்.

இதனிடையே, வட இந்தியாவிலிருந்து வரும் ஒருவன் குஷ்பூவின் இசையைக் கேட்கிறான்.மேலும் அவளுடன், முகேஷிற்குத் தெரியாத ஹிந்தியில் பேசி  சிரிப்பது, அவர்கள் Ghazel பற்றி பேசுவது எல்லாம் முகேஷிற்கு அவனிடம் பொறாமையை ஏற்படுத்துகிறது.அதனால் குஷ்பூவுடன் சண்டையிட்டு பிரிகிறான்.

நாளடைவில், வட இந்தியனின் செயல்பாடுகள் வெறுப்பை ஏற்படுத்த, குஷ்பூ முகேஷிடம் செல்ல விரும்புகிறாள்.

ஒரு சமயம், மதக்கலவரம் வெடிக்கிறது.வேறு வேறு மதத்தைச் சார்ந்த வினீத், யுவராணி துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகின்றனர்.அப்போது மத வெறியர்களைக் கண்டு, எங்கள் ரத்தத்தை வைத்து எந்த மதம் எனத் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்கள்.இறப்பதற்கு முன் அவர்கள் முகேஷ், குஷ்பூவை இணைத்து வைக்கிறார்கள்.

மரகதமணியின் இசை.எஸ்.பி.பி.பாடிய "சொல்லடி பாரதமாதா" என்ற பாடல் இனிமை.

No comments:

Post a Comment