Friday, January 16, 2015

18-நினைத்தாலே இனிக்கும்

                             

1979ஆம் ஆண்டு வந்த இயக்குநரின் படங்கள்

நினைத்தாலே இனிக்கும்

Andamaina Anubavam (தெலுங்கு) (நினைத்தாலே இனிக்கும்)

நூல்வேலி

"guppedu manasu" (நூல்வேலி _ தெலுங்கு)

"Idi Katha kaadu" (அவர்கள்) தெலுங்கு) இதில் கமல்,ஜெயசுதா,சரிதா, சரத் பாபு நடித்தனர்.

"கழுகன்" (தப்புத்தாளங்கள் மலையாளம்)

நண்பர் வெங்கட்ராமனுக்கு, பிரேமாலயா சார்பில் இயக்குநர் கேபி இயக்கத்தில் வந்த படம் நினைத்தாலே இனிக்கும். சுஜாதா எழுதி இருந்த கதை.இப்படத்தின் பெரும் பகுதி சிங்கப்பூரிலேயே எடுக்கப்பட்டது.

சந்துரு ஒரு பாடகன்.அவனதி இசைக்குழு சிங்கப்பூர் செல்கிறது.அங்கிருக்கும் சந்துருவின் காதலி சோனா..நோய்வாய்ப் படுகிறாள்.துயரமான முடிவுடன் படம் முடியும்.இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படம்.பாலசந்தர் பாணி படங்களிலிருந்து மாறுபட்ட படமாக அமைந்தது.எஸ்.வி.சேகர் இப்படம் மூலம் அறிமுகமானார்.சந்துருவாக கமலும், தீபக் என்னும் பாத்திரத்தில் ரஜினியும், சோனாவாக ஜெயபிரதாவும் நடித்திருந்தனர்.இப்படத்தில் வரும் இசைக்குழு அந்நாளில் பிரபலமாக இருந்த பீட்டில்ஸ் குழுவை நினைவுப் படுத்தும் விதத்தில் இருந்தது.

எம்.எஸ். விஸ்வனாதன் இசையில், அனைத்துப் பாடல்களுமே ஹிட்.

"பாரதி கண்ணம்மா". எங்கேயும் எப்போதும்,நம்ம ஊரு சிங்காரி,யாதும் ஊரே" சம்போ சிவ சம்போ'  ஆகிய பாடல்கள் இன்றும் முணுமுணுக்க வைப்பவையாக இருப்பவை.



நினைத்தாலே இனிக்கும் பற்றி தி இந்துவில் வந்த விமரிசனம் 2013ல்
-------------------------------------------------------------------------------------------------------------

1960- களில், பீட்டில்ஸ் ராக் இசைக்குழு இசையுலகில் மிகவும் பிரபலம். ஜான் லென்னன், பால் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகிய மாபெரும் இசை ஜாம்பவான்களை கொண்டது அந்த இசைக்குழு. மேடை, ஆடைகள், இசைக்கருவி, நடனம், பாடும் விதம் என்று எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி அசத்திய குழு அது.

இப்படி ஒரு இசைக்குழு தமிழில் இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில், 1979-ல் கே.பாலசந்தர் எடுத்த இளமைதுள்ளும் படம் 'நினைத்தாலே இனிக்கும்'. நகைச்சுவையோடு அழகான காதல் பயண அனுபவமாக வெளிவந்த இந்த படத்தில் நாயகனாக கமல்ஹாசன் நடித்திருப்பார். மற்றொரு நாயகனாக கலகலப்பான காமெடியால் பின்னியிருப்பார் ரஜினி. மையமாகத் தலையாட்டி கமலையும் ரசிகர்களையும் குழப்பும் அழகு தேவதையாக ஜெயப்பிரதா. இது எம்.எஸ்.விஸ்வநாதனின் படம் என்றே சொல்லும் அளவுக்கு பாடல்களில் அசத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். இளமைக்கொண்டாட்ட வரிகளுக்கு கண்ணதாசன். 'பாரதி கண்ணம்மா', 'நினைத்தாலே இனிக்கும்', 'யாதும் ஊரே' பாடல்கள் இன்றும் கொண்டாடப்படும் மெல்லிசை சொர்க்கங்கள்.

படத்தின் பின்னணி நாயகன் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். கமலுக்கு மயக்கும் குரலிலும், ரஜினிக்கு அதிரடி குரலிலும் பாடி அசத்தியிருப்பார். சண்டைக்காட்சியில் கூட ஒரு பாடல் உண்டு.

படத்தில் இடம்பெற்ற 'சம்போ சிவ சம்போ', 'நம்ம ஊரு சிங்காரி', 'எங்கேயும் எப்போதும்' போன்ற பாடல்கள் இன்றைக்கும் இளைஞர்களின் பெருவிருப்பத்துக்கான பாடல்கள். சுஜாதாவின் வசனங்களில், ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவை இழையோடும்.

No comments:

Post a Comment